அப்பல்லோவில் விடாது கருப்பாய் தொடரும் 'பஞ்சாயத்து'
அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஓபன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிச்சாமியும் பங்கேற்கவில்லை.
Subscribe to Oneindia Tamil
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவுக்கு தீவிர சிகிச்சை அளித்து வரும் அப்பல்லோ மருத்துவமனையில் விடாது கருப்பாய் அடுத்த கட்டம் தொடர்பான பஞ்சாயத்துகள் தொடர்ந்து வருகின்றன.

ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்த வதந்தியால் தமிழகமே ஸ்தம்பித்து போய்க் கொண்டிருந்தது. அதே நேரத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் ஒருபக்கம் நடந்து கொண்டிருந்தது.
ஆனால் இந்த கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள் ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்ளவில்லை. அவர்கள் இருவரும் அப்பல்லோவில் இருந்தனர்.

அதே நேரத்தில் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடுவும் அப்பலோவில் இருந்தார். மத்திய அரசின் சில நடவடிக்கைகள் தொடர்பாக அங்கு மும்முர ஆலோசனை நடந்ததாலேயே ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடியும் பங்கேற்கவில்லை என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications