ஜெ. உடல் அடக்கம் செய்யப்படுவதற்கு முன்பே பதவியேற்றது ஏன்? ஓபிஎஸ்க்கு தம்பிதுரை கேள்வி
ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்படுவதற்கு முன்பே ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றது ஏன் என எம்பி தம்பிதுரை கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவை: அதிமுகவில் இரு அணிகள் இல்லை என எம்பியும் லோக்சபா துனை சபாநாயகருமான தம்பிதுரை தெரிவித்துள்ளார். ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்படுவதற்கு முன்பே ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுக எம்பியும், லோக்சபா துனை சபாநாயகரும் சசிகலாவின் தீவிர ஆதரவாளருமான தம்பிதுரை கோவையில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அதிமுகவில் இரு அணிகள் இல்லை. ஒரே அணிதான் என்று அவர் கூறினார்.
ஜெயலலிதாவின் மரணத்தில் எந்த மர்மமும் இல்லை. அவருடைய மரணம் இயற்கையான மரணம் தான் என்றும் எம்பி தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

அடக்கத்துக்கு முன் பதவியேற்றது ஏன்?
அவர் மேலும் பேசியதாவது, இதற்கு முன்பு தமிழகத்தில் முதல்வர்கள் இறந்தால் அவர் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டதற்கு பிறகு தான் சட்டசபையைக் கூட்டி அடுத்த முதல்வர் யார் என்று தேர்ந்தெடுப்பார்கள். ஆனால் ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யபடுவதற்கு முன்பே பன்னீர்செல்வம் பதவி ஏற்றது ஏன்?

மக்களை திசை திருப்புகிறார்கள்
சசிகலா பொதுசெயலாளராக வேண்டும் என மூத்த அமைச்சர்கள் மதுசூதனன் மற்றும் பன்னீர்செல்வம் உட்பட அனைவரும் கையெழுத்திட்டுதான் சசிகலா பொறுப்பை ஏற்றார். ஆனால் இப்போது மக்களைக் திசை திருப்ப வேண்டும் என்பதற்காக அவர்கள் இப்படி பேசி கொண்டு இருக்கிறார்கள்.

மத்திய அரசு இணக்கமாகத்தான் உள்ளது
மத்திய அரசு ,மாநில அரசோடு இணைக்கமாக தான் செயல்பட்டு கொண்டு இருக்கிறது .அவர்கள் மாநில அரசு உரிமைகளிலில் தலையிடுவதில்லை.

ஜெ.மரணத்தில் சந்தேகம் இல்லை
அதிமுக அணி என்பது ஒரே அணி தான் வேறு அணி எதுவும் இல்லை எனவும்
ஜெயலிதா இறந்தது இயற்கையான மரணம் தான், அதில் சந்தேகம் ஏதுமில்லை.
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி












Click it and Unblock the Notifications