உருகி உருகி காதலித்தனர்.. பிறகு ஏன் இந்தக் கொடூரக் கொலை.. கண்ணீரில் சாத்தூர் கிராமம்
Recommended Video
சாத்தூர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நேற்று நடந்த கொடூரக் கொலை தொடர்பாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
இஎல் ரெட்டியாப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொன் மகாலட்சுமி என்ற மாணவியை மதன் என்ற இளைஞர் கொடூரமாக கத்தியால் குத்திக் கொன்றார். அத்தோடு தானும் தற்கொலை செய்து கொண்டார்.
இந்தக் கொடூரக் கொலையும், தற்கொலையும் அந்த கிராமத்தை அதிர்ச்சியில் மூழ்கடித்துள்ளது. ஆனால் இருவரும் ஒரு ஆண்டு அல்ல, இரண்டு ஆண்டு அல்ல, மாறாக 8 ஆண்டு காலம் காதலித்து வந்துள்ளனர் என்ற பரபரப்பு தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
பள்ளிக்காதல்
இருவரும் பள்ளியில் படித்தபோதிலிருந்தே காதலித்து வந்துள்ளனர். இருவரும் ஒரே ஜாதியாம். எனவே இதற்கு பெரிய அளவில் பிரச்சினை எழவில்லை என்று தெரிகிறது.
கல்லூரியிலும் தொடர்ந்த காதல்
பின்னர் இருவரும் கல்லூரிப் படிப்பிலும் காதலைத் தொடர்ந்துள்ளனர். சட்டப் படிப்பில் சேர்ந்தார் மதன். மகாலட்சுமி தனது ஆசிரியர் கனவை நனவாக்க ஆசிரியர் பயிற்சி வகுப்பில் சேர்கிறார். அங்கும் காதல் தொடர்கிறது.
வாய் சரியில்லை
இந்த நிலையில் மதனின் போக்கில் மாற்றம் தெரிகிறது. மகாலட்சுமி மீது சந்தேகப்பட ஆரம்பிக்கிறார். அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் உன்னை கல்யாணம் செய்ய முடியாது என்று அவர் கூற அதிர்ச்சி அடைகிறார் மகாலட்சுமி. இதனால் அவரைப் பிரிகிறார். ஆனால் மதன் மீண்டும் வந்து ஒட்டுகிறார். கெஞ்சுகிறார். ஆனால் மகாலட்சுமி அதை நிராகரிக்கிறார்.
கோபத்தில் கோரக் கொலை
இந்த நிலையில்தான் நேற்று மகாலட்சுமியைக் கொலை செய்து விட்டார் மதன். கிராமமே இவரது செயலால் வேதனையில் மூழ்கிக் கிடக்கிறது. உருகி உருகி காதலித்து விட்டு இப்படி ஆகி விட்டதே என்று அனைவரும் வருத்தத்தில் மூழ்கியுள்ளனர்.