"என்கவுண்டருக்கு" இரையாவதிலிருந்து தப்பவே சரணடைந்தாரா வரிச்சியூர் செல்வம்?

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரையில் நாட்டு வெடிகுண்டுகள் சிக்கிய விவகாரத்தில் பிரபல தாதா வரிச்சியூர் செல்வம், மணிமாறன் என்கிற கீரி மணி ஆகியோர் கோர்ட்டில் சரணடைந்ததற்குப் பின்னணியில் போலீஸ் என்கவுண்டர் பயம் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

வரிச்சியூர் செல்வம் நீண்ட காலமாக போலீஸின் ஹிட் லிஸ்ட்டில் இருப்பவர். அவர் மீது இல்லாத வழக்குகளே இல்லை. என்கவுண்டர் பட்டியலில் அவர் ஏற்கனவே சேர்க்கப்பட்டவர்தான்.

இருப்பினும் அவர் அப்படி இப்படி என தப்பிப் பிழைத்து வருகிறார். அதேசமயம், தனது சேட்டைகளையும் அவர் நிறுத்துவதாக தெரியவில்லை. இந்த நிலையில்தான் மதுரை அண்ணாநகர் நாட்டு வெடிகுண்டு விவகாரத்தில் அவர் சிக்கினார்.

இதனால் செல்வம் தரப்பு பீதியடைந்தது. இந்த முறை என்கவுண்டரில் போட்டாலும் போட்டு விடுவார்கள் என்ற அச்சம் அவர்களிடையே எழுந்தது. இதையடுத்தே செல்வம் கோர்ட்டில் பாதுகாப்பாக சரணடைந்து விட்டார் என்கிறார்கள்.

3 பேருக்கு வலைவீச்சு

3 பேருக்கு வலைவீச்சு

நாட்டு வெடிகுண்டு விவகாரம் தொடர்பாக செல்வம், கீரிமணி, பார்த்திபன் ஆகிய மூன்று பேருக்கு போலீஸார் குறி வைத்தனர். இவர்கள்தான் இந்த விவகாரத்துக்குப் பின்னர் தலைமறைவானவர்கள்.

அப்பள ராஜாதான் ஆரம்பம்

அப்பள ராஜாதான் ஆரம்பம்

பிரபல ரவுடி அப்பள ராஜாவின் கூட்டாளியான பிரவீன் என்பவர், வரிச்சியூர் செல்வத்துக்கு 20 வெடிகுண்டுகளை கீரிமணி மூலம் கொடுத்து அனுப்பியதாக போலீசில் வாக்குமூலம் அளித்திருந்தார். இதில் 11 குண்டுகள் சிக்கி விட்டன. மற்ற 9 குண்டுகள் என்ன ஆனது, எங்கே போனது என்பது தெரியவில்லை.

பெருசு அழகரைப் போட்டுத் தள்ள

பெருசு அழகரைப் போட்டுத் தள்ள

மதுரை பெத்தானியாபுரம் பெருசு அழகர் என்பவரை போட்டுத் தள்ள வரிச்சியூர் செலவம் திட்டமிட்டு வந்ததாகவும், இதற்காகவே இந்த வெடிகுண்டுகளை அவர் ஏற்பாடு செய்ததாகவும் ஒரு தகவல் கூறுகிறது.

பல வழக்குகள்

பல வழக்குகள்

வரிச்சியூர் செல்வம் பயங்கரமான ரவுடி ஆவார். இவருக்குக் கீழ் பலர் உள்ளனர். கொலை, ஆள் கடத்தல், கட்டப் பஞ்சாயத்து, பணம் பறிப்பு என பல வழக்குகள் செல்வம் மீது உள்ளன.

என்கவுண்டர் அபாயம்

என்கவுண்டர் அபாயம்

தற்போது நாட்டு வெடிகுண்டு வழக்கில் சிக்கியதால் நிச்சயம் என்கவுண்டர்தான் என்ற முடிவுக்கு செல்வம் வந்து விட்டார். இதுபோல முன்பு பலமுறை கூட அவர் கோர்ட்டில் சரணடைந்து தப்பியுள்ளார். அதே பாணியில்தான் தற்போதும் சரணடைந்து விட்டதாக கூறுகிறார்கள்.

விசாரித்தால் விவரம் தெரியும்

விசாரித்தால் விவரம் தெரியும்

தற்போது போலீஸார் செல்வம், பார்த்திபன், கீரிமணி ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்கவுள்ளனர். அப்போதுதான் ஏன் குண்டு தயாரித்தனர், 9
குண்டுகள் எங்கே, அவர்களின் திட்டம் என்ன என்பது குறித்த விவரங்கள் தெரிய வரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+