பனியன் கம்பெனியில் மாரீஸுடன் பின்னி பிணைந்த சுசீலா.. கள்ளக்காதலனை கணவனாக்க முயன்றதால் நிகழ்ந்த கொலை

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: பல்லடம் அருகே கடந்த 4 ஆம் தேதி பனியன் நிறுவன தொழிலாளி 13 இடங்களில் குத்தி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் பல்லடம் காவல்துறையினர் விசாரனை மேற்கொண்டதில் கள்ளகாதல் விவகாரத்தால் இறந்தவரின் மனைவியும் அவரது கள்ளக்காதலனும் சேர்ந்து கூலிப்படையை வைத்து கொலை செய்தது அம்பலமாகியுள்ளது.

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை அடுத்த தண்ணீர்பந்தல் பகுதியைச் சேர்ந்தவர் கோபால் (37). கொடைக்கானலை சேர்ந்த இவர் மனைவி சுசீலா மற்றும் இரு குழந்தைகளுடன் தண்ணீர்பந்தலில் வசித்து வருகிறார்.

சின்னக்கரையில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த 4 ஆம் தேதி பணி முடிந்து நிறுவனத்தை விட்டு வெளியில் வந்த கோபால் தனது வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

கடை முன் பேசிய நபர்

கடை முன் பேசிய நபர்

ஒரு கடை அருகே நின்று பேசி கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்கள் அவரை கத்தியால் சரமாரியமாக குத்தினர். கழுத்து, வயிறு, மார்பு உள்ளிட்ட இடங்களில் 13 முறை குத்தியதில் கோபால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கத்தியால் குத்திய நபர்கள் இரு சக்கர வாகனத்தில் தப்பி சென்றனர்.

கொலை

கொலை

இந்தக் கொலையை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக பல்லடம் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். திருப்பூர் மாவட்ட கண்காணிப்பாளர் சஷாங் சாய் தலைமையில் அங்கு வந்த போலீஸார் பிரேதத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மோப்ப நாய்

மோப்ப நாய்

சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சிறிது தூரம் ஓடியது. கொலைக்கான காரணம் குறித்தும், தப்பி ஓடிய மூவர் குறித்தும் பல்லடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் கோபாலின் மனைவி சுசீலாவின் நடவடிக்கைகளில் மாறுபாடு தெரிந்தது.

விசாரணை

விசாரணை

இதையடுத்து விசாரணை மேற்கொண்டதில் இறந்த நபரான கோபாலின் மனைவி சுசீலா என்பவரும் மாரீஸ் என்பவரும் ஒரு பனியன் நிறுவனத்தில் பணி புரிந்து வந்த போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. கடந்த 3 வருடங்களாக இருவருக்குள்ளும் பழக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மாரீஸை சுசீலா கேட்டுள்ளார்.

திருமணம்

திருமணம்

உனக்குதான் ஏற்கெனவே திருமணம் ஆகிவிட்டதே, இப்போது எப்படி திருமணம் செய்து கொள்வது என மாரீஸ் கேட்டுள்ளார். அதற்கு சுசீலா, தன் கணவர் கோபாலை கொலை செய்யலாம் என தெரிவித்ததை தொடர்ந்து இருவரும் சேர்ந்து திட்டமிட்டுள்ளனர். கூலிப்படையை வைத்து கொலை செய்யலாம் என திட்டமிட்டு திருச்சியில் இருந்து கூலிப்படையை வரவழைத்துள்ளனர்.

கோபால் கம்பெனி

கோபால் கம்பெனி

அதனை தொடர்ந்து கடந்த புதன்கிழமை கோபால் கம்பெனி வேலையை முடித்து வீடு திரும்பும் போது மாரீஸ் ஏற்பாடு செய்த கூலிப்படையினர் கோபாலை 13 இடங்களில் கத்தியால் குத்தி கொலை செய்தது, தற்போது காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கொலை சம்பவத்தில் தற்போது 6 நபர்களை பல்லடம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

 கள்ளக்காதலன்

கள்ளக்காதலன்

கோபால் மனைவி சுசீலாவின் கள்ளக்காதலன் மாரீஸ், கூலிப்படையை சேர்ந்த விஜய், மணிகண்டன், உலகேஸ்வரன், மதன்குமார், விநோத் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+