அய்யா முடியல! மனைவியும், மாமியாரும் திட்றாங்க! மேடையில் உடைந்து அழுத விசிக நிர்வாகி! தேற்றிய திருமா
தென்காசி: தென்காசி மாவட்டம் செவல்குளத்தில் நடந்த நிகழ்ச்சியில் ‛‛மனைவியும், மாமியாரும் திட்டி கட்சியை விட்டு விலகும்படி கூறுகின்றனர்'' என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் முன்பு நிர்வாகி ஒருவர் மேடையிலேயே கண்கலங்கி பேசியது உருக்கமாக இருந்தது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன். இவர் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி எம்பியாக இருக்கிறார். இந்நிலையில் தான் திருமாவளவனின் 60வது மணிவிழாவையொட்டி தமிழகம் முழுவதும் அந்த கட்சியினர் கொடியேற்றி சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

அந்த வரிசையில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டசபை தொகுதிக்குட்பட்ட செவல்குளம் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த விழாவில் திருமாவளவன் பங்கேற்றார்.
திருமாவளவனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேள, தாளங்கள் முழங்க நிர்வாகிகள் திருமாவளவனை வரவேற்றனர். இதையடுத்து செவல்குளம் கிராமத்தில் 60 அடி உயர கொடிக்கம்பத்தில் திருமாவளவன் கட்சி கொடியேற்றினார்.
அதன்பிறகு சங்கரன்கோவில் சட்டசபை தொகுதியின் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை செயலாளர் ஜெரால்ட்-பிரியா தம்பதியின் ஆண் குழந்தைக்கு ‛தொல்காப்பியன்' என திருமாவளவன் பெயர் சூட்டினர். இதையடுத்து நிகழ்ச்சிக்கான மேடையில் ஜெரால்ட் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
இந்த இடத்தில் கொடிக்கம்பம் கொண்டு வர போராடினோம். கண்ணீர் விட்டோம். காவல்துறை தரப்பில் இருந்து அதிக நெருக்கடி வந்தது. பெரிய யுத்தமே நடந்தது. என் மனைவி, அத்தை (மாமியார்) ஆகியோர் ‛‛இதுவெல்லாம் தேவையில்லை'' என திட்டி சொல்லகூடிய வகையில் நெருக்கடி இருந்தது.
கட்சியினர் யாரும் உதவி செய்யவில்லை. இத்தகைய சூழலில் என் மகனுக்கு பெயர்சூட்ட வந்துள்ள உங்களின் பாதம் தொட்டு வணங்குகிறேன்'' என பேசிவிட்டு திருமாவளவனின் காலை தொட்டு வணங்கினார். மேலும் இந்த வேளையில் அவர் உடைந்து கண்கலங்கினார்.
இதையடுத்து ஜெரால்ட்டை, திருமாவளவன் தேற்றினார். இதையடுத்து திருமாவளவன் பேசினார். அப்போது, ‛‛விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆந்திரா, கேரளா, தெலங்கானா, கர்நாடகாவில் வளர்ந்து வலிமை பெற்று வருகிறது. வருகிறது. சனாதனத்தை எதிர்க்கும் துணிச்சல் இயக்கமாக உள்ளது. உண்மையான அம்பேத்கர் இயக்கமாகவும், உண்மையான பெரியார் இயக்கமாகவு்ம இயங்கி வருகிறது.
இந்த இயக்கத்தை மேன்மெலும் வலிமைப்படுத்துவது உங்களின் அன்பும், நம்பிக்கையும் தான். இந்த கொடியேற்றும் நிகழ்வு குறித்து தழுதழுத்த குரலில் ஜெரால்ட் சில விஷயங்களை பதிவு செய்தார். செவல்குளத்தில் மட்டுமல்ல தமிழ்நாட்டில் பல இங்களில் இதுபோன்ற பிரச்சனைகளை சந்தித்து வருகிறோம். கொடிக்கம்பம் தொடர்பாக 30 ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டம் நடந்து வருகிறது.
இத்தகைய நெருக்கடியிலும் கூட மைய நீரோட்ட அரசியலில் நிலைத்தும் நிமிர்ந்தும் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளது. மற்ற கட்சிகளின் கொடிகள் பறக்கும் அதேஇடத்தில் விசிக கொடியை ஏற்றுவது என்பது பெரிய யுத்தமாக உள்ளது. காவல்துறையே பிடுங்கி செல்வது வாடிக்கையாக உள்ளது. பதற்றப்பட வேண்டாம். போலீஸ் பிடுங்கி சென்றாலும் அமைதியாக கடந்து செல்ல வேண்டும். இந்த பிரச்சனையை தமிழ்நாட்டில் நாம் பரவலாக எதிர்கொண்டு வருகிறோம். இதனை அமைதியாக கடந்து தான் செல்ல வேண்டும்.
விசிக கட்டுப்பாட்டுடன் இயங்க வேண்டும். உயர்ந்த ஜாதியினர் என கூறி கொள்வோரால் அரசியலமைப்பு சட்டத்தை எழுத முடியவில்லை. ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் பிறந்து அரசியலமைப்பு சட்டம் அம்பேத்கர் எழுதினார். அம்பேத்கரின் சட்டத்தை படித்து தீர்ப்பு எழுதுவதால் அவர்களுக்கு சம்பளம். அம்பேத்கர் எழுதிய சட்டத்தை படித்து வாதாடுவதால் அவர்களுக்கு பிழைப்பு நடக்கிறது.
ஆனால் இன்றைய தினத்தில் அம்பேத்கர் படத்தை நீதிமன்றங்களில் வைக்க கூடாது என்கின்றனர். நாடு எங்கே செல்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இதனை கூறுகிறேன். எல்லாவற்றையும் நாம் கடந்து போவோம்.ப எல்லாவற்றிலும் வெற்றி பெறுவோம்'' என பேச்சை முடித்தார்.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்?












Click it and Unblock the Notifications