மனஸ்தாபத்தால் தற்கொலை செய்த கர்ப்பிணி மனைவி- துக்கம் தாளாமல் கணவனும் தற்கொலை
கோவை: கோவையில் கர்ப்பிணியான மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவனும் உயிரைவிட்ட பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கோவை கணபதி எல்.ஜி.பி நகர் சிவானந்தாமில் பின்புற முள்ள 3 ஆவது வீதியில் வசித்தவர் குருஸ்திவாகர். இவரது மனைவி சத்யா.

குருஸ்திவாகருக்கு சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் தளிர்தலை. சத்யாவுக்கு சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் ஆகும். குருஸ்திவாகரும் சத்யாவும் காதலித்து வந்தனர். இவர் களது காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிந்ததும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
கடும் எதிர்ப்பையும் மீறி காதல் ஜோடி கரம் பிடித்தது. காதல் வெற்றியடைந்த மகிழ்ச்சியில் கோவை வந்தனர். குருஸ்திவாகர் இங்குள்ள தனியார் கம்பெனிக்கு வேலைக்கு சென்று வந்தார். இனிய இல்லறத்தின் சாட்சியாக சத்யா கர்ப்பமானார்.
காதல் ஜோடியின் கதையை கேட்ட அப்பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து இங்குள்ள வீடு அனைத்தும் உனது தாய் வீடுதான் என்று சத்யாவுக்கு 7 ஆவது மாதத்தில் தடபுடலாக வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தினர். சத்யா கர்ப்பிணியான விபரம் இரு வீட்டாருக்கும் தெரியவந்தது.
கோபத்தில் இருந்த பெற்றோர் தணிந்து பிள்ளைகளிடம் போனில் பேசத்தொடங்கினர். குருஸ்திவாகர் தம்பி டேனியல் கோவை சரவணம்பட்டியில் தங்கி கேட்ரிங் வேலை செய்து வருகிறார். டேனியல் அடிக்கடி அண்ணன், அண்ணியிடம் போனில் பேசி வந்தார்.
சில முறை நேரில் சந்தித்தும் வந்தார். இன்று காலை குருஸ்திவாகருக்கு தம்பி டேனியல் போன் செய்தார். பலமுறை அழைத்தும் போனை எடுக்காததால் டேனியல் அண்ணன் வீட்டுக்கு வந்தார். வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.
துவாரத்தின் வழியே பார்த்த போது குருஸ்திவாகரும், சத்யாவும் தூக்கில் பிணமாக தொங்கினர். அதிர்ச்சிடைந்த டேனியல் அலறி சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். இது குறித்து சரவணம்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இன்ஸ்பெக்டர் ஜோதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று தம்பதியின் உடலை மீட்டனர். வளைகாப்பு நடத்திய அப்பகுதி பொதுமக்கள் தம்பதியின் பிணத்தை கண்டு அழுகையையும் தாண்டி அதிர்ச்சியில் நிலைகுலைத்து போனார்கள்.
உடலை மீட்ட போலீசார் கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து விசாரணை நடத்தியபோது கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறில் சத்யா முதலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்ததாகவும் மனைவி இறந்த அதிர்ச்சியில் குருஸ்திவாகரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்ததாகவும் தெரிகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications