அடுத்தடுத்து வறண்டு வரும் ஏரிகள்... குடிநீருக்கு என்ன செய்யும் சென்னை?
சென்னையின் முக்கிய நீர் ஆதார ஏரிகள் எல்லாம் வறண்டு வருவதால் சென்னையில் குடிநீர் விநியோகம் குறைந்து வருகிறது. இதனால் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் சூழ்நிலை உருவாகி வருகிறது.
சென்னை: சென்னையின் பிரதான குடிநீர் ஆதாரங்களான ஏரிகள் எல்லாம் வறண்டு விட்டது.கல்குவாரி குட்டைகளில் நீர் எடுப்பதை கிராம மக்கள் எதிர்ப்பதால், மாற்று ஏற்பாடாக என்ன செய்வது என்று தெரியாமல் குடிநீர் வாரியம் திணறி வருகிறது. இதனால் சென்னையில் பெரும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் நிலை உருவாகி வருகிறது.
சென்னையின் குடிநீர் தேவையை செம்பரம்பாக்கம் ஏரி, புழல் ஏரி, சோழவரம், பூண்டி ஏரி, வீராணம் ஏரி ஆகிய ஏரிகள்தான் பூர்த்தி செய்து வருகின்றன. சென்னையின் குடிநீர் தேவை நாளொன்றுக்கு 1200 மில்லியன் லிட்டர். ஆனால் தற்போது வெறும் 800 மில்லியன் தண்ணீர் மட்டுமே விநியோகிக்கப்பட்டு வருகிறது. ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா நதிநீர் தண்ணீர் திறந்துவிடுவதை சில நாட்களுக்கு முன்பு நிறுத்திவிட்டதால், சென்னை முழுக்க முழுக்க இந்த ஏரிகளை மட்டுமே நம்பி உள்ளது. ஆனால் ஏரிகள் வறண்டு வருகின்றன.

இந்நிலையில்தான் சோழவரம் ஏரியில் உள்ள கல்குவாரிகளில் உள்ள பெரும் பள்ளங்களில் தேங்கியுள்ள குட்டை நீரை சென்னை குடிநீர் வாரியம், ராட்சத மோட்டர்களை வைத்து உறிஞ்சி, அதனை குழாய்கள் மூலம் புழல் ஏரிக்கு அனுப்பி அங்கிருந்து சுத்திகரித்து விநியோகிக்கப்படுகிறது. இதற்கு ஆறு ராட்சத மோட்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதற்கு மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். ராட்சத மோட்டார் மூலம் நீரை உறிஞ்சுவதால் நிலத்தடி நீர் குறைந்து விடும் அபாயம் உள்ளது. பிறகு உள்ளூர் மக்கள் தண்னீருக்கு எங்கு போவார்கள் என கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், அப்பகுதியில் வாழும் கால்நடைகளின் நிலை இன்னும் மோசமாகும். குடிநீர் இல்லாமல் அவை மடிந்து போகும் வாய்ப்பு உள்ளது என அஞ்சி, மக்கள் இதனை எதிர்க்கின்றனர்.
சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய தற்போது எந்தவொரு ஆதாரமும் இல்லாத காரணத்தால் அதிகாரிகள் முழி பிதுங்கி வருகின்றனர். இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் நிலை உருவாகிக் கொண்டுள்ளது.
மக்கள் தண்ணீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துவது குறித்து அரசு விழிப்புணர்வை ஏற்படுத்துவது கட்டாயமாகிறது.
-
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்?












Click it and Unblock the Notifications