மகனுக்கு லொகேஷன் பார்க்க சிங்கப்பூர் சென்றேன்... கூட்டணி அறிவிப்பு விரைவில்: விஜயகாந்த்
சென்னை: வரும் லோக்சபா தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாகவும், தற்போது லொகேஷன் பார்க்கவே சிங்கப்பூர் சென்றதாகவும் தெரிவித்துள்ளார் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்.
சிறுநீரகப் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் சமீபத்தில் சிங்கப்பூர் கிளம்பிச் சென்றார். உடன் அவர் மனைவியும் சென்றிருந்தார். அங்கு அவர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் பரிசோதனைகள் செய்து கொண்டதாகவும், ஒரு மாதத்துக்கு அங்கு தங்கியிருந்து அவர் சிகிச்சைப் பெற்றாக வேண்டும் என மருத்துவர்கள் கூறியதாகவும் செய்திகள் வெளியாயின.
இந்நிலையில் நேற்று சென்னை திரும்பினார் விஜயகாந்த். சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விஜயகாந்த் கூறியதாவது:-

மகன் படத்திற்காக...
‘சகாப்தம்' என்ற படத்தின் படப்பிடிப்புக்கான இடங்களை பார்ப்பதற்காக சிங்கப்பூர் சென்றிருந்தேன்.

என்னைப் பற்றி....
ஆனால், அதற்குள் என்னை பற்றி கதை, திரைக்கதை, வசனம் எல்லாம் எழுதி விட்டார்கள். அதை நான் கண்டுகொள்ளாமல் இருந்து விட்டேன்.

உங்களுக்கு ஒரு கேள்வி...
உங்களிடம் நான் ஒரு கேள்வி கேட்கிறேன். அதற்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டும். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேரை விடுதலை செய்து தமிழக சட்டசபையில் அறிவித்தார்கள். அப்போது, மத்திய அரசு முடிவு செய்யாவிட்டால் நாங்கள் விடுதலை செய்வோம் என்று கூறினார்கள். இப்போது என்ன ஆகிவிட்டது? பதில் சொல்லுங்கள்?

கூட்டணி...
கூட்டணி பற்றி யாரிடமும் பேசலாம். ஆனால், நான் கூட்டணி பேசும்போது உங்களை வைத்துக்கொண்டு தான் பேசுவேன்' என இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications