சென்னையில் பள்ளிகள் திறக்கப்பட்டால் கடும் நடவடிக்கை.. மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
சென்னையில் உத்தரவை மீறி பள்ளிகள் திறக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Recommended Video

சென்னை: சென்னையில் உத்தரவை மீறி பள்ளிகள் திறக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் எச்சரிக்கை விடுத்துள்ளார்..
வங்க கடல் பகுதியில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் தற்போது கனமழை பெய்து வருகிறது.

சென்னையில் மிக கனமழை பெய்து வருகிறது. 7ம் தேதி மிக கனமழை பெய்யும் என்று ரெட் அலெர்ட் அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கல்லூரிகள் எப்போதும் போல இயங்கும் என்று கூறப்பட்டுள்ளது.
சென்னையில் உத்தரவை மீறி பள்ளிகள் திறக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் எச்சரிக்கை விடுத்துள்ளார். திறக்கப்பட்டு இருக்கும் பள்ளிகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்படும், அதன்பின் நடவடிக்கை எடுக்கப்படும் என்றுள்ளார்.












Click it and Unblock the Notifications