டெல்லியில் அமைச்சர் விஜயபாஸ்கர்... இன்று ரத்தாகுமா நீட் தேர்வு?
சென்னை: நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு கோருவதற்காக இன்று மீண்டும் டெல்லி சென்றுள்ளார் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.
காலை 6 மணிக்கு சென்னை விமான நிலையத்திலிருந்து, சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணனுடன் அவர் புறப்பட்டார்.

நீட் தேர்வில் இருந்து விலக்குபெற சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதலை பெற்றுத் தர மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவை நேரில் சந்தித்து வலியுறுத்துகிறார்கள்.
ஏற்கனவே, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள் இரண்டு முறை டெல்லி சென்று பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ள நிலையில், அமைச்சர் விஜய பாஸ்கர் டெல்லி சென்றுள்ளார்.
இன்று அல்லது நாளை நீட் தேர்விலிருந்து தமிழகம் விலக்குப் பெற்றுவிடும். ஜல்லிக் கட்டுக்கு தீர்வு கண்ட வகையில் நீட்டுக்கும் தீர்வு எட்டப்பட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications