தொண்டர்கள் பேச்சை விஜயகாந்த் கேட்பாரா அல்லது கேட்க மாட்டாரா?
சென்னை: தொண்டர்களிடம் கேட்டு அவர்கள் சொன்னதை வைத்துத்தான் கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தேன் என்று அடிக்கடி சொல்லி வந்தார் விஜயகாந்த். அதாவது அதிமுக கூட்டணியை விட்டு வெளியேறியி பிறகு.
இப்போதும் அவரது கட்சியின் அதே தொண்டர்கள், தனித்துப் போட்டியிடுவோம் என்று உரத்த குரலில் உளுந்தூர்ப்பேட்டையில் வைத்து விஜயகாந்த்திடம் தெளிவாக கூறி விட்டனர்.
ஆனால் இப்போதும் தொண்டர்கள் குரலை விஜயகாந்த் மதிப்பாரா அல்லது, இதுதான் என் முடிவு ஏற்றுக் கொள்ளுங்கள் என்று தன் முடிவை அவர்கள் மீது திணிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

எல்லாமே தொண்டர்களைக் கேட்டுத்தான்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சட்டசபைத் தேர்தலின்போது முதல் முறையாக கூட்டணி அரசியலுக்கு மாறினார். இதை எனது தொண்டர்களிடம் கேட்டு, அவர்கள் விருப்பத்தின்படியே செய்வதாக அப்போது கூறினார்.

என்ன சொன்னார்கள் தொண்டர்கள்
சேலத்தில் விஜயகாந்த் கூட்டிய மாநாட்டின்போது கூட்டணி சேருவோம் என்றும் அதிமுகவுடன் சேரலாம் என்றும் தொண்டர்கள் கோஷமிட்டனர். இதையடுத்து அவர்கள் சொல்வதை ஏற்பதாக பின்னர் விஜயகாந்த் அறிவித்தார்.

இப்ப என்ன சொன்னாங்க
இப்போது தேமுதிகவின் தொண்டர்கள் உளுந்தூர்ப்பேட்டை மாநாட்டினின்போது தனித்துப் போட்டியிடுவோம் என்று குரல் கொடுத்துள்ளனர்.

விஜயகாந்த்தே இதை எதிர்பார்க்கவில்லை
ஆனால் தொண்டர்கள் இப்படிச் சொல்வார்கள் என்று விஜயகாந்த்தே கூட எதிர்பார்க்கவில்லை என்றுதான் தெரிகிறது. காரணம், அவர் பாஜக அல்லது திமுகவுடன் கூட்டணி சேரவே ஆர்வமாக உள்ளார்.

பாஜக பக்கம் போவாரா
குறிப்பாக பாஜகவுடன்தான் அவர் தீவிரமாகப் பேசி வருகிறார். அக்கட்சியுடன்தான் கூட்டணி அமைப்பார் என்றும் பரவலாக கருதப்படுகிறது. இதனால்தான் தொண்டர்கள் தனித்துப் போட்டி என்றதும் விஜயகாந்த்துக்கு அது சற்று ஏமாற்றமாகத்தான் இருந்திருக்கும் என்கிறார்கள்.

தனது முடிவைத் திணிப்பாரா..
எனவே தொண்டர்கள் கூறியபடி தனித்துப் போடியிடாமல் பாஜகவுடன் கூட்டணி என்ற முடிவை எடுத்து, இதை நீங்கள் பின்பற்றுங்கள் என்று விஜயகாந்த் கூறினாலும் கூறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ரொம்பக் குழப்பமாத்தான் இருக்கு.. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications