845 வேட்பாளர்கள் .. ஏகப்பட்ட 'இவிஎம்'களை தமிழகத்தில் இறக்குகிறது 'இசி'!
சென்னை: தமிழகத்தில் 845 வேட்பாளர்கள் களத்தில் இருப்பதால் அதிக அளவிலான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை கொண்டு வரவுள்ளது தேர்தல் ஆணையம்
இதுவரை இல்லாத அளவுக்கு தமிழகத்தில் அதிக அளவிலான வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இது ஒரு சாதனை அளவாகும்.
இதற்கேற்ற வகையில் அதிகப்படியான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை தேர்தல் ஆணையம் தமிழகத்திற்கு அனுப்பவுள்ளது.

ஒவ்வொரு தொகுதிக்கும் 2 மெஷின்
ஒவ்வொரு தொகுதிக்கும் 2 மெஷின்களை வைக்க திட்டமிட்டுள்ளனர். ஒரு மெஷினில் 16 வேட்பாளர்களின் பெயர்கள்தான் இடம் பெற முடியும்.

குறைந்ததே 19 பேர்
தமிழகத்தில் தற்போது அதிகபட்சம் சென்னையின் இரு தொகுதிகளில் 45க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் உள்ளனர். குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 19 வேட்பாளர்கள் உள்ளனர்.

நோட்டாவுக்கும் ஒரு பொத்தான்
மேலும் இந்த முறை நோட்டா அதாவது யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்று கூடுதலாக ஒரு பொத்தான் இடம் பெறவுள்ளது. எனவே இரண்டு மெஷின்கள் வைத்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

குறைந்தது 22 தொகுதிகளில்
தமிழகத்தில் தற்போது 22 தொகுதிகளில் 15க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் உள்ளனர்.

வட , தென் சென்னையில் 3 மெஷின்கள்
வட சென்னை மற்றும் தென் சென்னையில் தலா 3 மெஷின்கள் வைக்கப்பட வேண்டும்.

கைவசம் 10,500 மெஷின்கள்
தமிழகத்தில் தற்போது 10,500 மெஷின்கள் கைவசம் உள்ளன. ஆனால் இது போதாது என்பதால் கூடுதல் மெஷின்களை தேர்தல் ஆணையத்திடம் கேட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications