விவசாயிகளைப் பாதிக்கும் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: நல்லகண்ணு
தூத்துக்குடி: விவசாயிகளை பாதிக்கும் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என இந்திய கம்யூ தேசிய குழு உறுப்பினர் நல்லகண்ணு தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் அவரது சிலைக்கு இந்திய கம்யூ தேசிய செயற்குழு உறுப்பினர் நல்லகண்ணு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :-

நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியவர் அம்பேத்கர். இன்றைய அரசியல் சூழ்நிலையில் அம்பேத்காரின் சட்டம் கேள்விகுறியாக உள்ளது. ஆந்திர மாநிலததில் 20 தமிழகர்கள் சுட்டு கொல்லப்பட்டதை இநதிய கம்யூ வன்மையாக கண்டிக்கிறது. தமிழகத்தை சேர்ந்த ஏழை தொழிலாளர்களை திட்டமிட்டு ஆந்திர காவல்துறையினர் கொன்றுள்ளனர். மரம் வெட்டும் தொழிலாளர்களை விரட்டி பிடித்திருக்கலாம். ஆனால் திட்டமிட்டு சுட்டு கொன்றுள்ளனர். நிலம் கையகப்படுத்தும் மசோதா மூலம் நாட்டின் பெரும்பாலான விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். எதிர்காலத்தில் விவசாய தொழிலா பாதிக்கும் நிலை உருவாகும். இதனால் ஏராளமான விவசாய தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல திண்டாடி போவார்கள்.
இதனால் இந்த நிலம் கையகப்படுத்தும் சட்டதை மத்திய அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த பேட்டியின் போது மாவட்ட செயலாளர் உள்பட பலர் உடன் இருந்தனர்.












Click it and Unblock the Notifications