என்ன அண்ணாச்சி, தாம்பரத்துக்கே 10 ரூபாதான், பிளாட்பாரத்துக்கும் அதே கட்டணமா.. கேட்கிறார் சரத்!
சென்னை: ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணத்தை மத்திய அரசு திடீரென்று ரூ.5லிருந்து ரூ.10 ஆக உயர்த்தியிருப்பது கண்டிக்கத்தக்கது. பொதுமக்கள் தங்கள் உறவினர்களை அழைத்துவர, வழியனுப்பிட மட்டுமே குடும்பத்தோடு நடைமேடைச் சீட்டு வாங்குகின்றனர்.
ரயில் சேவையை அவர்கள் நேரடியாகப் பயன் படுத்தவில்லை. மேலும் சென்னை எழும்பூரில் இருந்து செங்கல்பட்டு வரை ரெயிலில் பயணம் செய்வதற்கு ஏறத்தாழ ரூ.15 மட்டுமே கட்டணம் உள்ளது.
ரூ.10 கட்டணத்தில் தாம்பரம் வரை பயணம் செய்ய வழி உள்ளது. இவ்வாறு பயணக் கட்டணங்களே குறைவாக இருக்கிற நிலையில் நடைமேடைக் கட்டணத்தை திடீரென்று உயர்த்தி இருப்பதை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications