Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மக்கள் நலன் கருதி வேலைநிறுத்த அறிவிப்பை திரும்ப பெறுங்கள் - முதல்வர் கோரிக்கை

பொதுமக்களின் நலன் கருதி போராட்டத்தை கைவிட்டு பணியைத் தொடர வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை வைத்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்த அறிவிப்பை திரும்ப பெற முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பொதுமக்களின் நலன் கருதி போராட்டத்தை கைவிட்டு பணியைத் தொடர கோரிக்கை வைத்துள்ளார்.

அரசு ஊழியர்களுக்கு 8-வது ஊதிய மாற்றத்தை உடனடியாக அமலாக்க வேண்டும். அதற்கு முன்பு 20 சதவீதம் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அனைவருக்கும் அமலாக்க வேண்டும் என்பது ஜாக்டோ ஜியோ அமைப்பின் கோரிக்கை.

Withdraw strike CM requests Jacto Geo

இதனை வலியுறுத்தி பல கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. செப்டம்பர் 7முதல் காலவறையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் அரசு ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் அறிவித்தனர்.

இவ்வாறு போராட்டம் தொடர்ந்தால் அரசு பணிகள் பாதிக்கும் என்பதால், ஜாக்டோ - ஜியோ அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்த, தமிழக அரசு முடிவு செய்தது. ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் நிர்வாகிகளை செப்டம்பர் 4ஆம் தேதி பேச்சுவார்த்தைக்கு வருமாறு அரசு அழைப்பு விடுத்தது.

ஜாக்டோ-ஜியோ அமைப்புடன் தமிழக அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் பேச்சுவாரத்தை தோல்வியடைந்தது. கோரிக்கை தொடர்பாக 3 அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. எனவே முதல்வரிடம் ஆலோசித்து முடிவை அறிவிப்பதாக அமைச்சர்கள் கூறியுள்ளனர் என ஜாக்டோ-ஜியோ அமைப்பு தெரிவித்துள்ளது.

சாதகமான முடிவு வராவிட்டால் திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் நடைபெறும் என்று ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் தெரிவித்தனர்.

ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவித்ததை தொடர்ந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்த அறிவிப்பை திரும்ப பெற முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பொதுமக்களின் நலன் கருதி போராட்டத்தை கைவிட்டு பணியைத் தொடர வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை வைத்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி விடுத்துள்ள அறிக்கை :

ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்தவர்கள் வரும் 7ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டம் நடத்துவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, பொதுமக்களின் நலன் கருதி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் மற்றும் வருவாய்த் துறை அமைச்சர் ஆகியோர் அடங்கிய குழு, இச்சங்கங்களின் பிரதிநிதிகளோடு பேச்சு வார்த்தை நடத்தியது.

இக்கூட்டத்தில், பல்வேறு சங்கங்களின் பிரதிநிதிகள் தங்கள் கோரிக்கைகளை எடுத்துரைத்தனர். பொதுவாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவது, ஏழாவது ஊதியக் குழுவின் அடிப்படையில் புதிய ஊதியம் நிர்ணயிப்பது, அதைச் செயல்படுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டால் இடைக்கால நிவாரணம் வழங்குவது, சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு முறையான காலமுறை ஊதியம் வழங்குவது என்ற நான்கு கோரிக்கைகளை முக்கியமான கோரிக்கைகளாக வலியுறுத்தி பேசினர்.

இது குறித்து விரிவாக விவாதித்த பின்பு, பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்துவது குறித்து, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஸ்ரீதர் அவர்களின் தலைமையில் குழு திருத்தியமைக்கப்பட்டதை எடுத்துரைத்து, இக்குழுவின் அறிக்கை வரும் நவம்பர் மாத இறுதிக்குள் அளிக்கப்படவுள்ளது என்றும், அந்த குழுவின் அறிக்கையின் அடிப்படையில் அரசு உரிய முடிவுகளை எடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஊதிய விகிதம் திருத்தியமைப்பது, இடைக்கால நிவாரணம் வழங்குவது, காலமுறை ஊதியத்திற்குப் பதில் முறையான காலமுறை ஊதியம் வழங்குதல் போன்ற கோரிக்கைகள் குறித்து, இதற்கென அமைக்கப்பட்ட ஊதியக் குழு பரிசீலித்து வருவதாகவும், இக்குழு இம்மாத இறுதிக்குள் அறிக்கையை சமர்ப்பிக்கும் என்றும், இதில் மேலும் காலதாமதம் ஏற்படாது என்றும், அந்த அறிக்கையின் அடிப்படையில் அரசு உரிய முடிவுகளை எடுக்குமென்றும், அவசியம் ஏற்படும் நிலையில் இடைக்கால நிவாரணம் குறித்த அறிவிப்பை உரிய நேரத்தில் அரசு வெளியிடும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

எனவே, கோரிக்கைகள் சம்பந்தமாக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளையும், அதன் தற்போதைய நிலை குறித்தும் தெளிவாக விளக்கி, இந்த அரசு, ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் கோரிக்கையை கனிவோடு பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனவே, பொதுமக்களின் நலன் கருதி, ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு தற்போது அறிவித்துள்ள காலவரையற்ற போராட்டத்தை கைவிட்டு, மக்கள் பணியை தொடர்ந்து ஆற்ற வேண்டுமென நான் கேட்டுக் கொள்கிறேன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+