For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதுரை மாநகராட்சி இடத்திற்கு போலி பட்டா கொடுத்த பெண் கைது

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Woman arrested for making fake patta
திருப்புவனம்: மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான இடத்திற்கு போலி பட்டா தயார் செய்து கொடுத்த பெண்ணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மதுரை சக்கிமங்கலத்தைச் சேர்ந்த அக்பர்அலி மனைவி ரசியாபேகம் (48). இவர் புவனேஸ்வரி நகரில் பெட்டி கடை நடத்தி வருகிறார். பட்டா வாங்கி தருவதாக கூறி பொதுமக்களிடம் பணம் வசூலித்து வந்தார். இது தொடர்பாக கலெக்டர் சுப்பிரமணியனுக்கு புகார் சென்றது.

இந்த புகார்கள் குறித்து விசாரிக்குமாறு ஆதி திராவிட நல தாசில்தார்கள் ராமச்சசந்திரன் மற்றும் கருப்பையா ஆகியோருக்கு கலெக்டர் உத்தரவிட்டார். விசாரணையில் ரசியா பேகம் பொதுமக்களுக்கு போலியாக பட்டா தயார் செய்து வழங்கியது தெரியவந்தது. மேலும் மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான ஒரு இடத்தையும் பட்டா போட்டு கொடுத்துள்ளார்.

ஒரு பட்டாவிற்கு ரூ.6 ஆயிரம் வாங்கியுள்ளார் ரசியாபேகம். இது குறித்து சிலைமான் போலீசில் தாசில்தார் ராமச்சந்திரன் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன் வழக்குப் திந்து ரசியாபேகத்தை கைது செய்து, அவரிடம் இருந்த 54 பட்டாக்களை பறிமுதல் செய்தார். அவருக்கு உதவியாக இருந்த மதுரை ஆழ்வார்புரம் நாகராஜன், மதுரை அண்ணா நகர் சுரேஸ் ஆகியோரை போலீசார் தேடி வருகிறார்.

English summary
Madurai police have arrested a woman who had made a fake patta for corporation land
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X