சேலையால் கழுத்தை இறுக்கி பெண் கொடூரமாக கொலை.. திருத்தணி அருகே பயங்கரம் !
திருத்தணி: திருத்தணி அருகே சேலையால் கழுத்து இறுக்கி பெண் கொடூரமாக கொல்லப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருத்தணி பட்டாபிராம் கிராமத்தை சேர்ந்த பார்த்திபன் (35), லட்சுமி (30), தம்பதிக்கு கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. தம்பதிக்கு ஜனா (8), ஹேமாவதி (6) என்ற மகன், மகள் உள்ளனர். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கடந்த ஐந்து வருடத்துக்கு முன் கணவரை பிரிந்துசென்ற லட்சுமி, தனது பெற்றோர் வீட்டில் வசித்துவந்தார். குழந்தைகளும் அவருடன் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், லட்சுமி திடீரென மாயமானார். அவரது பெற்றோர் பல இடங்களில் தேடியும் லட்சுமியை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனிடையே இன்று காலை திருத்தணி அருகே எட்டிக்குப்பம் ஏரியில் லட்சுமி கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது கழுத்து சேலையால் இறுக்கப்பட்டு இருந்தது.
இதுபற்றி எட்டிக்குப்பம் கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த தகவல்படி திருத்தணி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாரதி போலீசாருடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து லட்சுமி சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதுபற்றி வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், லட்சுமியை கொலை செய்தவர்கள் யார், எதற்காக கொலை செய்யப்பட்டார் என்ற கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலையால் கழுத்து இறுக்கி பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications