ரத்தத்தை மாற்றி செலுத்தியதால் கோமாவிற்கு போன பெண்... விசாரணையில் சிக்குவார்களா மருத்துவர்கள்?
ரத்தத்தை மாற்றி செலுத்தியதால் பெண் ஒருவர் கோமா நிலைக்கு சென்ற விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட உள்ளது.
திருவாரூர்: திருவாரூர் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு அவருக்குரிய வகை ரத்தத்தை ஏற்றாமல் மாற்றி ஏற்றியதால் கோமா நிலைக்கு சென்ற விவகாரம் குறித்து, நன்னிலம் மருத்துவமனை மருத்துவர்களிடம் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் அசோகன் விசாரணை நடத்துகிறார்.
திருவாரூர் செருவண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜன். இவரது மனைவி கமலா. இவர்களுக்கு திருமணம் நடந்து 18 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாமல் இருந்த நிலையில், கமலா கர்ப்பவதியானார். இதனையடுத்து கமலா நன்னிலம் அரசு மருத்துவமனையில் உரிய பரிசோதனை செய்து குழந்தை வளர்ச்சி குறித்து சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த அக்டோபர் மாதம் 23ம் தேதி கமலாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து, திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 25ம் தேதி அன்று அவருக்கு செய்யப்பட்ட அறுவை சிகிச்சையின் மூலம் பெண் குழந்தை பிறந்தது. வீடு திரும்பிய கமலா ஒரு வாரம் கழித்து மருத்துவமனைக்கு மீண்டும் வந்தார். அப்போது, கமலாவிற்கு ரத்தம் குறைவாக உள்ளதாக கூறி டாக்டர்கள் ரத்தம் செலுத்தியுள்ளனர். ரத்தம் செலுத்திய சில மணி நேரத்தில் கமலா கோமா நிலைக்கு சென்றுவிட்டார்.
கமலா திடீரென கோமா நிலைக்குச் சென்றதால் அதிர்ந்து போன அவரது உறவினர், இதுகுறித்து புகார் தெரிவித்தனர். இதனையடுத்து, இந்த விவகாரம் தீவிரம் அடைந்தது.
இதுதொடர்பாக, நன்னிலம் அரசு மருத்துவமனை மருத்துவர் அகிலா, சிகிச்சை முறையில் தவறு எதுவும் நடக்கவில்லை என்றும், பாதிக்கப்பட்ட பெண் கமலாவின் சிகிச்சை தொடர்பான ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு அறிக்கை தாக்கல் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இன்று மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் அசோகன் நன்னிலம் மருத்துவமனை மருத்துவர்களிடம் விசாரணை நடத்துகிறார். தவறு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அசோகன் கூறியுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications