குடும்பத்தகராறு: பெண் டாக்டர் விஷ ஊசி போட்டு தற்கொலை… மகன் கவலைகிடம்
சென்னை: சென்னையில் குடும்பத்தகராறு காரணமாக பெண் டாக்டர் ஒருவர் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகனுக்கும் விஷ ஊசி போடப்பட்டுள்ளதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
வடபழனியைச் சேர்ந்தவர் கீதா (41). வடபழனியில் உள்ள பிரபல மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்தார். இவரது கணவர் ராஜராஜன். தொழில் அதிபர்.இவர்களது மகன் சித்தார்த் 9-ம் வகுப்பு படித்து வருகிறான்.
கணவன் மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்படுவதாக கூறப்படுகிறது. இரு தினங்களுக்கு முன்பும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தியடைந்த டாக்டர் கீதா விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மகனுக்கும் விஷ ஊசி போட்டுள்ளார்.
வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்த சித்தார்த்தை போலீசார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. இது குறித்து விருகம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்












Click it and Unblock the Notifications