கொடுமைப்படுத்திய சித்தி.. தட்டிக் கேட்காத தந்தை.. கடற்கரையில் நின்று கதறி அழுத பெண் டாக்டர்!
நாகர்கோவில்: கன்னியாகுமரி கடற்கரையில் நின்று கொண்டு ஒரு இளம் பெண் டாக்டர் தனது சித்தி கொடுமை தாங்க முடியாமல் கதறி அழுதது அங்கு வந்தோரை அதிர வைத்தது. போலீஸார் அவரை மீட்டு ஆறுதல் கூறினர். தான் திரும்ப வீட்டுக்குப் போக விரும்பவில்லை என்று அப்பெண் கூறி விட்டதால் அவரை எங்கு அனுப்புவது என்பது குறித்து போலீஸார் ஆலோசித்து வருகின்றனர்.
கன்னியாகுமரி கடற்கரையில் உள்ள திரிவேணி சங்கமத்தில் நேற்று ஒரு பெண் தனியாக கடலோரமாக அமர்ந்திருந்தார். அழுதபடி இருந்த அப்பெண் திடீரென கடலுக்குள் போகத் தொடங்கினார். இதைப் பார்த்த அங்கு ரோந்தில் இருந்த போலீஸார் ஓடிப் போய் அவரைத் தடுத்து மீட்டனர். அவர்களிடம் அப்பெண் கதறி அழுதார். எனக்கு வாழப் பிடிக்கவில்லை. என்னை விடுங்கள் என்று கூறி கதறினார்.
இதையடுத்து அப்பெண்ணை சமாதானப்படுத்திய போலீஸார் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு மகளிர் போலீஸார் அப்பெண்ணை அமர வைத்து ஆறுதல் கூறி விசாரித்தனர். அப்போது அவர் தர்மபுரியயை அடுத்த தொப்பூரைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்தது.

சித்தி கொடுமை
இப்பெண்ணுக்கு தாயார் இல்லை. தந்தை 2வது திருமணம் செய்து கொண்டார். வந்த சித்தியோ, இப்பெண்ணை கொடுமைப்படுத்தி வந்துள்ளார். தனக்குப் பிறந்த 3 குழந்தைகள் மீது மட்டுமே பாசத்தைக் கொட்டி வந்துள்ளார்.

ஹோமியோபதி டாக்டர்
இப்பெண் ஹோமியோபதி படித்துள்ளார். தனது வீட்டுக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தார். டாக்டராக வேலை பார்த்தும் கூட சித்தி தொல்லையிலிருந்து இப்பெண்ணால் தப்ப முடியவில்லை. தினசரி சித்தி கொடுமை அதிகரித்துள்ளது.

மவுனம் காத்த தந்தை
தனது சித்தியின் தொல்லை குறித்து தந்தையிடம் கூறியும் கூட அவர் எதுவும் பேசுவதில்லையாம். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த அப்பெண் வீட்டை விட்டு வெளியேறி விட்டார்.

கன்னியாகுமரி கடற்கரையில்
ரயில் ஏறி நாகர்கோவில் வந்த அவர் அங்கிருந்து கன்னியாகுமரி வந்துள்ளார். கடற்கரைக்கு வந்த அவருக்கு அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை. இதனால் தற்கொலை முடிவை எடுத்துள்ளார். அப்போதுதான் போலீஸார் அவரை மீட்டனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications