For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

8 மாதமாக பேசமால் இருந்த பெண்ணுக்கு கருமாரியம்மன் கோவில் திருவிழாவில் பேச்சு வந்த அதிசயம்

By Siva
Google Oneindia Tamil News

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் 8 மாதமாக பேசாமல் இருந்த பெண்ணுக்கு கோவில் திருவிழாவில் தீச்சட்டி எடுத்தபோது திடீர் என்று பேச்சு வந்தது.

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள கிளியனூரைச் சேர்ந்தவர் ஏழுமலை. அவரது மனைவி வேல்விழி(28). அவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். ஏழுமலை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திடீர் என்று இறந்துவிட்டார். இதையடுத்து வேல்விழி 3 குழந்தைகளை காப்பாற்ற போராடிக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திடீர் என்று அவர் பேசும் திறனை இழந்தார். எவ்வளவோ முயன்றும், பல மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் பேச்சு வரவில்லை. அவருக்கு இனி பேச்சு வராது என்று மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். இந்நிலையில் கிளியனூர் கருமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பலரும் தீச்சட்டி எடுத்தனர்.

வேல்விழியும் தீச்சட்டி எடுத்து கோவிலுக்கு சென்றார். அப்போது அவருக்கு திடீர் என பேச்சு வந்தது. அம்மன் அருளால் தான் தன்னால் பழையபடி பேச முடிந்துள்ளது என்றார் வேல்விழி.

அவருக்கு திடீர் என்று மீண்டும் பேசும் திறன் வந்ததை பார்த்து ஊர்மக்கள் அதிசயித்தனர்.

English summary
A 28-year old woman who lost her speaking ability eight months ago has got back that ability at a temple festival in Villupuram district.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X