என் மருமகனை விட்ரு... அட்வைஸ் செய்த பெண்ணை சரமாரியாக வெட்டித் தள்ளிய கள்ளக்காதலி!

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: தனது மருமகனுடன் வைத்துள்ள கள்ளக்காதலை விட்டு விடுமாறு கூறி எச்சரித்த பெண்மணியை அரிவாளால் வெட்டிப் படுகாயப்படுத்தி விட்டார் கள்ளக்காதலி.

திண்டுக்கல் அருகில் உள்ள நாகம்பட்டியை சேர்ந்த பெருமாள் என்பவரின் மனைவி காவேரி (35). இவர் சில மாதங்களுக்கு முன்பு சவேரியார் பாளையத்தை சேர்ந்த சசிகலா (40) என்பவரது வீட்டில் குடியிருந்து வந்தார். அப்போது சசிகலாவின் மருமகனுக்கும், காவேரிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது அப்படியே கள்ளக்காதலாக மாறியது.

இந்தக் கள்ளக்காதல் சசிகலாவுக்குத் தெரிய வரவே அவர் காவேரியைக் கண்டித்துள்ளார். வீட்டைக் காலி செய்யக் கூறினார். இதையடுத்து காவேரி வீட்டைக் காலி செய்து விட்டு தனது சொந்த வீட்டுக்குப் போய் விட்டார். அதன் பிறகும் சசிகலா மருமகனுடன் உறவைத் தொடர்ந்துள்ளார்.

Woman hacked near Dindigul

இது சசிகலாவுக்குத் தெரிய வரவே நேற்று காவேரி வீட்டுக்குப் போன அவர் காவேரியுடன் சண்டை பிடித்துள்ளார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. அப்போது அரிவாளை எடுத்த காவேரி, சசிகலாவை சரமாரியாக வெட்டினார். இதில் சசிகலா ரத்த வெள்ளத்தில் விழுந்தார் சசிகலா.

இதையடு அப்பகுதி மக்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த வேடசந்தூர் போலீஸார் சசிகலாவை வெட்டிய காவேரியைக் கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+