ஓடும் ரயிலிலிருந்து தவறி விழுந்த அம்மா, மகள் - மருத்துவமனையில் உயிர் ஊசல்
சென்னை: சென்னை தாம்பரம் சானிடோரியம் ரயில் நிலையத்தில், 3 வயது பெண் குழந்தையுடன் ஓடும் மின்சார ரயிலில் இருந்து தவறி விழுந்த வடமாநில பெண் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னையை அடுத்த தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று காலை 9 மணிக்கு சென்னை கடற்கரைக்கு மின்சார ரயில் சென்றது. காலை நேரம் என்பதால் ரயிலில் கூட்டம் அதிகமாக இருந்தது.

சானிடோரியம் ரயில் நிலையத்தை கடந்து ரயில் செல்லும்போது கூட்ட நெரிசலில் 30 வயது இளம்பெண் ஒருவர், 3 வயது பெண் குழந்தையுடன் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்தார். இதில் இருவரும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர். உடனே பயணிகள் ரயிலை நிறுத்தினர்.
உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த தாய், மகள் இருவரையும் குரோம்பேட்டை மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். உயிருக்கு போராடும் பெண் சுயநினைவு இழந்து விட்டார். குழந்தையும் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடி வருகிறது. இவர்கள் யார் என்ற விவரம் தெரியவில்லை அந்த பெண் வடமாநிலத்தைச் சேர்ந்தவர் போல உள்ளார்.
இருவரையும் தாம்பரம் ரயில்வே போலீசார் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தாய், மகள் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களைப் பற்றிய விவரங்களை அறிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி!












Click it and Unblock the Notifications