கோட்டை வளாகத்தில் பெண் கொலை, கணவர் தற்கொலை முயற்சி.. போலீஸ் அதிர்ச்சி
சென்னை: மிகுந்த பாதுகாப்புடன் கூடிய சென்னை புனித ஜார்ஜ் கோட்டை வளாகப் பகுதியில் ஒரு பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண்ணை மது போதையில் கொன்ற கணவர், தானும் தற்கொலைக்கு முயன்று பின்னர் மீட்கப்பட்டார்.
சென்னை துரைப்பாக்கம் கண்ணகி நகரைச் சேர்ந்தவர் சுரேஷ் (27). இவர் ஒரு பெயிண்டர். இவரது மனைவி சுவேதா (22). இவர்களுக்கு சுதன் என்ற 3 வயது மகனும், சுஜி என்ற 1 வயது பெண் குழந்தையும் உள்ளனர்.

கண்ணகி நகர் குடிசை மாற்று வாரிய வீட்டில் வசித்து வந்த சுரேஷ், சுவேதா தம்பதி வருமானம் போதாததால், வீட்டை வாடகைக்கு விட்டு ரிசர்வ் வங்கி அருகே உள்ள பிளாட்பாரக் குடிசைப் பகுதியில் குடியேறினர். சுரேஷ் மொடாக் குடியர். தினசரி குடிப்பதுதான் இவருக்குப் பிரதானம். போதிய வருமானமும் இல்லை. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு நடக்கும்.
நேற்றும் சுரேஷ், சுவேதா இடையே மோதல் வெடித்தது. இருவரும் கடுமையாக சண்டை போட்டுள்ளனர். அப்போது மோதலை வளர்க்க வேண்டாம் என்று கருதிய சுவேதா எழுந்து கோட்டைப் பக்கம் உள்ள பகுதிக்கு போய் விட்டார். ஆனால் பின்னாலேயே வந்த சுரேஷ் மனைவியை தடுத்து நிறுத்தி சண்டை போட்டார். பின்னர் கோபத்தில் சுவேதாவின் கழுத்தை சேலையால் இறுக்கினார். இதில் சுவேதா பரிதாபமாக உயிரிழந்தார்.
இதைப் பார்த்த சுரேஷ், அதே சேலையால் மரத்தில் தூக்குப் போட முயன்றார். அதை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பார்த்து விட்டு ஓடி வந்து சுரேஷை மீட்டனர். போலீஸார் விரைந்து வந்து சுவேதாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் நடந்த இடம் தலைமைச் செயலகம், சட்டசபை ஆகியவை அடங்கிய புனித ஜார்ஜ் கோட்டைப் பகுதியில் நடந்துள்ளது. இது போலீஸாருக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்தை போலீஸ் உயர் அதிகாரிகள் நேரில் வந்து பார்த்து பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளனர்.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications