மதுரையில் போலீஸ் நிலையம் அருகே பெண் வெட்டிக்கொலை: நகைக் கொள்ளை
சென்னை: மதுரையில் பட்டப்பகலில் பெண் ஒருவர் நகைக்காக வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை எஸ்.எஸ்.காலனி சுப்பிரமணியபிள்ளை தெருவைச் சேர்ந்தவர் மாதவன், ஓய்வு பெற்ற அரசு அதிகாரி. இவரது மனைவி செண்பகவள்ளி (வயது 66). இவர்களது வீடு போலீஸ் நிலையத்தில் இருந்து 400 மீட்டர் தொலைவிலேயே உள்ளது.
இன்று பகல் 12 மணி அளவில் மாதவன் வீட்டை விட்டு வெளியே சென்றிருந்தார். அப்போது செண்பக வள்ளி மட்டுமே வீட்டில் தனியாக இருந்தார்.
சிறிது நேரத்தில் மாதவன் வீடு திரும்பியபோது கதவு திறந்து கிடந்தது. அவர் உள்ளே சென்று பார்த்த போது அங்கு செண்பக வள்ளி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்த தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பிணமாக கிடந்த செண்பகவள்ளி உடலில் அரிவாள் வெட்டு மற்றும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன.
போலீசார் நடத்திய விசாரணையில், செண்பக வள்ளியின் கழுத்தில் கிடந்த 5 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. எனவே நகைக்காக கொலை நடந்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
செண்பகவள்ளி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த ‘மர்ம' மனிதன் திட்டமிட்டே வீட்டுக்குள் புகுந்து நகை பறிப்பில் ஈடுபட்டு இருக்கலாம் என்றும், அப்போது செண்பகவள்ளி நகையை கொடுக்க மறுத்து சத்தம் போட்டதால் அவரை ‘மர்ம' மனிதன் கொலை செய்து இருக்கலாம் என்றும் போலீசார் கருதுகின்றனர்.
சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் விரைந்து வந்து தடயங்களை பதிவு செய்தனர். மோப்பநாயும் வரவழைக்கப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டது.
பட்டப்பகலில் போலீஸ் நிலையம் அருகே பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் எஸ்.எஸ். காலனியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்!












Click it and Unblock the Notifications