சீரியல் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி விபச்சாரத்தில் தள்ளிய கும்பல் - புரோக்கர் கைது, பெண் மீட்பு
சென்னையில் சொகுசு காரில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
Recommended Video

சென்னை: டிவி சீரியலில் நடிக்க வாய்ப்பு வாங்கித்தருவதாக கூறி பெண்களை ஏமாற்றி விபச்சாரத்தில் தள்ளும் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னையில் சொகுசு காரில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட புரோக்கரை கைது செய்த போலீசார், காரில் இருந்த பெண்ணை மீட்டுள்ளனர்.
சென்னைக்கு வேலை தேடி வரும் பெண்களை ரயில் நிலையத்திலேயே புரோக்கர் கும்பல் மடக்கிவிடுகிறது.

சீரியல் வாய்ப்பு
சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாகவும், தனியார் நிறுவனங்களில் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாகவும், ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றி விபசார தொழிலில் தள்ளி விடுகின்றனர்.

மிரட்டி பணியவைப்பு
புரோக்கர் கும்பலின் மிரட்டலுக்கு பணியும் பெண்களை அடுக்குமாடி குடியிருப்புகள், பங்களா வீடுகள் மற்றும் தனியார் விடுதிகளுக்கு அழைத்துச் சென்று தங்க வைத்து அவர்களை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி பணம் சம்பாதிப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்து வருகிறது.

பாலியல் தொழிலாளிகள் கைது
இந்த குற்றவாளிகளை கைது செய்ய பாலியல் தொழில் தடுப்புப் பிரிவு ஆய்வாளர் தலைமையிலான போலீஸார், ரகசியமாக கண்காணித்து பாலியல் தொழில் தரகர்களை கைது செய்து வருகின்றனர். நேற்று வளசரவாக்கம், பகுதியில் கண்காணிப்பு பணியிலிருந்தபோது, மெகாமார்ட் அருகே சொகுசு காரில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

சொகுசு காரில் பாலியல் தொழில்
சொகுசு காரில் பாலியல் தொழில் நடத்திய ஆந்திர மாநிலம், விஜயவாடாவை சேர்ந்த நரேஷ்,23 பீமாவரம் பகுதியை சேர்ந்த ரவி,32 ஆகிய இருவரை கைது செய்தனர். மேற்படி காரில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண் ஒருவர் மீட்கப்பட்டார்.

காப்பகத்தில் இளம் பெண்
சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 2 குற்றவாளிகளும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.
மீட்கப்பட்ட பெண் நீதிமன்ற உத்தரவுப்படி அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்
சென்னைக்கு தனியாக வரும் பெண்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications