ஐஜி மருமகனிடம் ரூ. 7000 லஞ்சம் வாங்கிய தாசில்தார் எஸ்தர் ராணி கைது

Subscribe to Oneindia Tamil

செங்கோட்டை: செங்கோட்டையில் காவல்துறை ஐஜியின் மருமகனிடம் ரூ. 7000 லஞ்சம் வாங்கிய பெண் தாசில்தார் கைது செய்யப்பட்டார்.

செங்கோட்டையில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐஜியாக இருப்பவர் பாலசுப்ரமணியம். இவர் முன்பு மதுரையில் பணியில் இருந்தவர் ஆவார். இவரது மருமகன் செண்பகராஜ். இவர் ஹாலோ பிளாக் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார்.

இவர் ஒரு பணிக்காக செங்கோட்டை தாசில்தாரை அணுகியுள்ளார். ஆள் யார் என்று தெரியாமல், தாசில்தார் எஸ்தர் ராணி, செண்பகராஜிடம் ரூ. 10,000 லஞ்சம் கேட்டுள்ளார். ரூ. 7000 தருவதாக செண்பகராஜ் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் லஞ்ச ஒழிப்புப் போலீஸுக்கும் தகவல் கொடுத்தார்.

அவர்களின் யோசனைப்படி வேதிப் பொருள் தடவப்பட்ட பணத்தை செண்பகராஜ் எஸ்தர் ராணியிடம் இன்று கொடுத்தார். அப்போது டிஎஸ்பி தங்கச்சாமி தலைமையிலான போலீஸார் எஸ்தர் ராணியை கையும் களவுமாக பிடித்துக் கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+