த.வா.க. வேட்பாளர்கள் வெற்றி பெற சூளுரைப்போம்: வேல்முருகன் மே தின வாழ்த்துகள்
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலில் தொழிலாளர்கள் உரிமைக்கும் தமிழகத்தின் வாழ்வுரிமைக்கும் போராடுகிற தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் அனைத்து வேட்பாளர்களுக்கும்
மகத்தான வெற்றியைத் தேடித் தர இந்த மே தின நாளில் சூளுரைப்போம் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி. வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தொழிலாளர்களின் வெற்றி விழாவான மே தினத்தை கொண்டாடும் அனைவருக்கும் தொழிலாளர் வாழ்வுரிமைச் சங்கம் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பாக மே தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தற்போது நடைபெறும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் தொழிலாளர்கள் உரிமைக்கும் தமிழகத்தின் வாழ்வுரிமைக்கும் போராடுகிற தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் அனைத்து வேட்பாளர்களுக்கும் மகத்தான வெற்றியைத் தேடித் தர இந்த மே தின நாளில் சூளுரைப்போம்!
நெய்வேலி என்.எல்.சி. தொழிலாளர்கள் பிரச்சனை உள்ளிட்ட தமிழகத்தின் வாழ்வுரிமைகளுக்காக இடைவிடாது தொடர்ந்து போராடி வருகிற, நெய்வேலி சட்டமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிடுகிற மகத்தான மக்கள் தலைவர் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்களுக்கு 'கேமரா' சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகளில் வெற்றி பெற வைப்போம் எனவும் இந்த மே நாளில் தொழிலாளர் தோழர்கள் அனைவரும் உறுதி ஏற்போம்.
அனைத்து தொழிலாளர் தோழர்களுக்கும் மீண்டும் எங்களது நெஞ்சார்ந்த மே தின நல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications