டிவி பார்க்கையில், பர்கர் சாப்பிடுகையில் மாரடைப்பில் மரணம் அடைந்த நபர்கள்
சென்னை: இப்படியும் கூட மாரடைப்பு ஏற்பட்டு இறப்பார்களா என்று கேட்கும் வகையில் சிலர் மரணம் அடைந்துள்ளனர்.
மாரடைப்பு யாருக்கு எப்பொழுது வரும் என்று தெரியவில்லை. வயதானவர்களுக்கு தான் மாரடைப்பு வரும் என்பது எல்லாம் அந்த காலம். தற்போது 20 வயது உள்ளவர்களுக்கும் மாரடைப்பு வருகிறது.
சில வித்தியாசமான தருணங்களில் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தவர்கள் பற்றி பார்ப்போம்.

படம் பார்த்து
மும்பை வசாய் பகுதியில் உள்ள தியேட்டர் ஒன்றில் கிராண்ட் மஸ்தி என்ற இந்தி படம் பார்த்து விழுந்து விழுந்து சிரித்த வாலிபர் மங்கேஷ் போகல்(22) மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.

ஜிம்மில்
டிவி மற்றும் திரைப்பட நடிகரான அபிர் கோஸ்வாமிக்கு(38) ஜிம்மில் டிரெட்மில்லில் இருக்கையில் மாரடைப்பு ஏற்பட்டது. அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பர்கர் சாப்பிடுகையில்
லாஸ் வேகாஸில் ஒருவர் ட்ரிபிள் பைபாஸ் பர்கர் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.

டிவி சீரியல் பார்த்து
இங்கிலாந்தைச் சேர்ந்த அலெக்ஸ் மிட்செல்(50) என்பவர் தி குடீஸ் என்ற டிவி சீரியலை பார்த்து இடைவிடாமல் 25 நிமிடங்கள் சிரித்துள்ளார். அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.

உறவு
குரோஷியாவில் உள்ள ஸ்பில்ட் நகரைச் சேர்ந்த 80 வயது தாத்தா 30 வயது விலைமாதுவிடம் பேரம் பேசி அவருக்கு 4 பவுண்ட் கொடுத்து ஓரல் செக்ஸுக்கு சம்மதிக்க வைத்தார். ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு சென்றபோது குஷியில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.












Click it and Unblock the Notifications