மயக்க மருந்து கொடுத்து இளம்பெண்ணை பலாத்காரம் செய்த ஜெராக்ஸ் கடை அதிபர் கைது
சென்னை: சென்னையில் திருமண ஆசைகாட்டி இளம்பெண்ணிற்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த ஜெராக்ஸ் கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
சென்னை நம்மாழ்வார்பேட்டையைச் சேர்ந்தவர் பாதிக்கப்பட்ட பெண். இவர் சென்னை அயனாவரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்திருந்தார்.
அதன்படி, கல்லூரிப்படிப்பை முடித்துள்ள அவர் சென்னை வில்லிவாக்கத்தில் ஜெராக்ஸ் கடை ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். அக்கடையின் உரிமையாளரான மகேஷ், அப்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்று வந்துள்ளார். அப்பெண்ணும் அதற்கு மறுத்து வந்துள்ளார்.
இந்நிலையில் அப்பெண்ணை குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன்பின்னர் அப்பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைக் காட்டி உல்லாசமாக இருந்துள்ளார்.
அதன் காரணமாக அப்பெண் கர்ப்பமடைந்துள்ளார். ஆனால், கருவைக் கலைக்க சொல்லி மகேஷ் வற்புறுத்தியதால், அவரும் கருவைக் கலைத்துள்ளார். ஆனால், திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டார்.
இதனால், மகேஷ் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்தப்புகார் மீதாக விசாரணை நடத்திய அனைத்து மகளிர் காவல் நிலைய அதிகாரிகள் மகேஷை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications