குட்கா ஊழல் நடந்தது உண்மைதான்.. ஆனால்.. முன்னாள் கமிஷனர் ஜார்ஜ் பரபரப்பு
குட்கா ஊழல் நடந்தது உண்மைதான் என்று சென்னை முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் பேட்டி அளித்துள்ளார்.
Recommended Video

சென்னை: குட்கா ஊழல் நடந்தது உண்மைதான் என்று சென்னை முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் பேட்டி அளித்துள்ளார்.
குட்கா ஊழல் இந்திய அளவில் வைரல் ஆகியுள்ளது. தமிழக அரசின் மேல் தொங்கும் பெரிய கத்தியாக இந்த ஊழல் உருவெடுத்து இருக்கிறது.
இதில் இன்னும் நிறைய முக்கியமான புதிர்கள் விலகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் முக்கியமான கைதுகள் அரங்கேறவும் வாய்ப்புள்ளது.

சிபிஐ ரெய்டு
குட்கா ஊழல் தொடர்பாக நேற்று முதல்நாள் தமிழகத்தில் சிபிஐ திடீர் என்று ரெய்டு நடத்தியது. குட்கா விவகாரம் வெடித்துள்ள நிலையில் முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். குட்கா ஊழல் குறித்த சிபிஐ சோதனை தொடர்பாக ஜார்ஜ் விளக்கம் அளித்தார்.

பேட்டி அளித்தார்
நொளம்பூரிலுள்ள இல்லத்தில் வைத்து ஜார்ஜ் பேட்டி அளித்தார். மதுரை நீதிமன்றம் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது என்று நீதிமன்ற உத்தரவுகளை மேற்கோள் காட்டி ஜார்ஜ் பேட்டி அளித்தார். சிபிஐ ரெய்டு பற்றி அவர் விளக்கம் அளித்தார்.

தயார்
அதில், அரசை விசாரணை நடத்த சொல்லுங்கள், நான் வருகிறேன். என் மீது சந்தேகம் இருந்தால் விசாரணை நடத்தட்டும். சிபிஐ உட்பட எந்த விசாரணை அமைப்பு வேண்டுமானாலும் விசாரிக்கட்டும். நிறைய விசாரணை அமைப்புகள் இருக்கிறது, விசாரிக்கட்டும்.

நடந்தது உண்மை
ஆம் குட்கா ஊழல் நடந்தது உண்மைதான். குட்காவை வைத்து முறைகேடு நடந்து இருக்கிறது. இதில் பணம் கைமாறி இருக்கிறது. இதுகுறித்து நான் கொடுத்த புகார்களை விசாரிக்கவில்லை.

யார்?
அரசுக்கு இதுகுறித்து அறிக்கையும் அளித்தேன். ஊழல் நடந்தது உண்மைதான். ஆனால் யாருக்கு பணம் சென்றது என்று தெரியாது. அதை சிபிஐதான் விசாரிக்க வேண்டும் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications