ஆர்.கே.நகரில் தேர்தல் ரத்து.. இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது: சசிகலா புஷ்பா

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்த தேர்தல் ஆணையத்திற்கு அதிமுக கலக எம்.பி சசிகலா புஷ்பா பாராட்டு தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அவரது தொகுதியான ஆர்.கே.நகர் தொகுதிக்கு வருகிற 12ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், பணப்பட்டுவாடா புகார்களை தொடர்ந்து, ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Yet again proved India is the largest democracy, says Sasikala Pushpa

இந்த முடிவு தொடர்பாக அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட எம்.பி.யான சசிகலா புஷ்பா செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

இந்த தேர்தல் நியாயமான முறையில் கையாளப்படவில்லை. தொடர்ந்து பணப்பட்டுவாடா குறித்த புகார்கள் வந்து கொண்டே இருந்தது. எனவே, தேர்தல் ஆணையம் தலையிட்டு இந்த தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. ஜனநாயகம் உயிர்ப்போடு உள்ளது நிரூபணமாகியுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவை நான் பாராட்டுகிறேன். மேலும், இந்தியா மீண்டும் ஒரு ஜனநாயக நாடு என்பதை நிரூபித்துவிட்டது. இவ்வாறு சசிகலா புஷ்பா தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+