காதலியின் கழுத்தை அறுத்த காதலன் தூக்கிட்டு தற்கொலை.. மதுரை அருகே பரபரப்பு !

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை அருகே காதலியின் கழுத்தை பிளேடால் அறுத்த இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள வலசை கிராமத்தை சேர்ந்தவர் ராஜாமணி (23), கட்டிட தொழிலாளியான இவரும் அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவியும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தததாக கூறப்படுகிறது.

Young Men commit suicide at madurai

இந்நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாரு ராஜமணி அந்த பெண்ணை வற்புறுத்தியுள்ளார். ஆனால் அவர், படிப்பை முடித்தபின் திருமணம் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே நேற்று இருவரும் மதுரை அருகே உள்ள சரந்தாங்கி மலை பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு இருவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ராஜாமணி பிளேடால் தனது கையை அறுத்துக் கொண்டதோடு, எதிர் பாராதவிதமாக காதலியின் கழுத்தையும் அறுத்துள்ளார். இதில் அவர் மயங்கி விழுந்தார்.

இதை பார்த்த ராஜாமணி, காதலி இறந்து விட்டதாக நினைத்து, அங்கிருந்த மரத்தில் தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறிது நேரத்தில் அந்த பெண் எழுந்து பார்த்தபோது, ராஜாமணி தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து அவர் பாலமேடு போலீசுக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் பாலமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கழுத்தில் காயமடைந்த அந்த பெண் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காதலியை பிளேடால் அறுத்து, இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+