பெட்ரோல் கேனுடன் செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை மிரட்டல்... புதுக்கோட்டையில் பரபரப்பு !
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் பெட்ரோல் கேனுடன் செல்போன் டவர் மீது ஏறி இளைஞர் ஒருவர் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை அருகில் உள்ள கடயக்குடி கிராமத்தைச் சேர்ந்த கணேசன் மகன் சரவணன். இவர் புதுக்கோட்டை நகரத்தில் உள்ள ஒரு தனியார் செல்போன் கோபுரத்தில் பெட்ரோல் கேனுடன் ஏறி நின்று தற்கொலை மிரட்டல் விடுத்தார்.

அப்போது அவர் கூறுகையில், தன் குடும்பத்தினர் மீது புதுக்கோட்டை போலீசார் பொய் வழக்கு போட்டுள்ளனர். அதனால் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என்று கூறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து பொதுமக்களும், போலீசாரும் அவரை சமாதானம் செய்து கீழே இறங்குமாறு கூறினர். பின்னர் கீழே இறங்கிய அவரிடம் விசாரணை செய்தபோது, தனது சித்தப்பா சேவுகர் எங்கள் குடும்பத்தினர் மீது கொடுத்த பொய் புகார் மீது போலீசார் வழக்கு போட்டுள்ளனர் இதனால் தான் செல்போன் டவறில் ஏறி தற்கொலை விடுத்ததாகவும் கூறினார். தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொள்ள காவல்நிலையம் அழைத்துச் சென்றனர் போலீசார்












Click it and Unblock the Notifications