பிரியாணி கொடுத்து மயக்கி.. பிளஸ்டூ மாணவியை சீரழித்த இளைஞர்... செல்போனில் மிரட்டல்.. போக்ஸோவில் கைது
பிளஸ் 2 மாணவியை சீரழித்த இளைஞர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
கம்பம்: பிரியாணி கொடுத்தே பிளஸ் 2 மாணவியை சீரழித்த இளைஞரை, போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது அப்பா, அம்மாவையும் போலீசார் கைது செய்தனர்.
கம்பம் மாலையம்மாள் புரத்தை சேர்ந்தவர் சக்தி நாகராஜ். 23 வயதாகும் இவர் ஒரு டிரைவர். கடந்த 3 மாசமாக அதே பகுதியை பிளஸ்-2 மாணவி ஒருவரை காதலித்துள்ளார்.

தன் காதலை அந்த மாணவியிடம் சொல்லியபோது, அதை அவர் ஏற்க மறுத்துள்ளார். ஆனாலும் நாகராஜ் விடவே இல்லை. மாணவியை விரட்டி விரட்டி, தன் காதலை ஏற்குமாறு கேட்டுள்ளார்.. கட்டாயப்படுத்தவும் செய்தார். அப்போதும் மாணவி நாகராஜ் காதலை ஏற்கவே இல்லை.
அதனால் மாணவி போட்டோவை, தன்னுடைய போட்டோவுடன் சேர்த்து மார்பிங் பண்ணி இணையத்தில் பரவிட்டார். சம்பவத்தன்று மாணவியை தன் வீட்டுக்கு வலுக்கட்டாயமாக நாகராஜ் அழைத்தார். இணையத்தில் போட்டோக்களை பரவி வருவதை அறியாத மாணவியும் இதை நம்பி நாகராஜ் வீட்டுக்கு சென்றார்.
அங்கே நாகராஜ் பிரியாணியை சாப்பிடுமாறு தந்தார். அதை வாங்கி சாப்பிட்ட மாணவி கொஞ்ச நேரத்திலேயே மயங்கி விழுந்துவிட்டார். அப்போது அவரை பாலியல் வன்கொடுமை செய்த நாகராஜ், ஏராளமான போட்டோ, வீடியோக்களையும் எடுத்து வைத்து கொண்டார்.
கண்விழித்த போதுதான் மாணவிக்கு எல்லா விவரமும் தெரியவந்தது. இதற்கு உடந்தையாக நாகராஜின் அம்மா, அப்பாவும் இருந்ததாக சொல்லப்படுகிறது. எடுத்து வைத்த ஆபாச வீடியோவை காட்டி மாணவியிடம் காட்டி, இதை வெளியே சொன்னால் இணையத்தில் பரவ விட்டுவிடுவதாகவும் மிரட்டினார்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவி, பெற்றோரிடம் வந்து விஷயத்தை சொல்லி கதறி அழ, பெற்றோரோ கம்பம் வடக்கு போலீசில் புகார் தந்தனர். இதையடுத்து போலீசார், சக்தி நாகராஜ் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது அம்மா, அப்பாவையும் போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications