கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா?... 'சாங்' பாடி 'ராங்' காட்டியவருக்கு வலைவீச்சு!
Subscribe to Oneindia Tamil

கோவையில் இந்த ஈவ் டீசிங் சம்பவம் நடந்துள்ளது. தொண்டாமுத்தூர் ஆலாந்துறை பகுதியைச் சேர்ந்த 19 வயதுப் பெண் சரிதா. இவர் பிபிஏ முதலாமாண்டு படித்து வருகிறார்.
சம்பவத்தன்று காலையில் சீனிவாசபுரம் பஸ் நிறுத்தத்திற்கு கல்லூரிக்குச் செல்வதற்காக வந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த 22 வயதான மனோஜ் குமார் என்பவர் கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா, இல்லை ஓடிப் போயி கல்யாணந்தான் கட்டிக்கலாமா என்று கிண்டலடித்துப் பாட்டுப் பாடியுள்ளார்.
இதையடுத்து சரிதா தனது செல்போனில் தந்தைக்குத் தகவல் கொடுத்தார். இதைப் பார்த்த மனோஜ் அங்கிருந்து ஓடி விட்டார். பின்னர் சரிதாவும், அவரது தந்தையும் போலீஸில் புகார் கொடுத்தனர்.
போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மனோஜ் குமாரைத் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications