அருந்ததியர் உள்ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்கு... இது தியாகத் தலைமுறை: தீக்குளித்தவரின் உருக்கமான கடிதம்
அருந்ததியர்களுக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்த வலியுறுத்தி தீக்குளித்த ஆதித்தமிழர் பேரவையைச் சேர்ந்த மகேஸ்வரன் எழுதிய உருக்கமான கடிதம் கிடைத்துள்ளது.
திருப்பூர்: ஆதித் தமிழர் பேரவையின் திருப்பூர் மாவட்ட துணைத் தலைவராக இருந்த மகேஸ்வரன் நேற்று நள்ளிரவு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
அவர் தற்கொலைக்கான காரணம் குறித்து எழுதியுள்ள உருக்கமான கடிதம் தற்போது கிடைத்துள்ளது. சிறிய துண்டுச் சீட்டில் "மகேஸ்வரன் ஆதித்தமிழர் பேரவை திருப்பூர் வடக்கு மாவட்ட துணைத் தலைவர் திருப்பூர் என்று அவரது முகவரியை மகேஸ்வரன் எழுதியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து அடுத்த துண்டு சீட்டில் "தமிழக அரசே! அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டை 6% ஆக உயர்த்தி வழங்கு!" என்று எழுதி கையொப்பமிட்டு தேதி இரவு 12 மணி என்பதை குறிப்பிட்டுள்ளார்.

உருக்கமான கடிதம்
மேலும், "இறப்புகள் தொடரலாம் இலக்கை அடையும் வரை உள்இட ஒதுக்கீட்டை விகிதாச்சார அடிப்படையில் உயர்த்தி பெற்றே தீருவோம். ஆம்! இது தியாகத் தலைமுறைதான்!" என்று எழுதி அங்கும் தனது கையொப்பத்தை இட்டுள்ளார்.

தீக்குளிப்பு
இந்தக் கடித்ததை எழுதி முடித்த மகேஸ்வரன், நள்ளிரவு ஒரு மணியளவில் திருப்பூர் பார்க் சாலையில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். திருப்பூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.

2 உயிர் பலி
இதே கோரிக்கை வலியுறுத்தி ஆதித் தமிழர் பேரவையைச் சேர்ந்த நீலவேந்தன் மற்றும் ராணி ஆகியோர் தீக்குளித்து மாண்டனர். ஆனாலும் இந்தக் கோரிக்கை பற்றி தமிழக அரசு இன்னும் வாயே திறக்கவில்லை என்ற நிலையில் இன்று மற்றொரு ஆதித்தமிழர் தொண்டர் தீக்குளித்துள்ளார்.

திமுக ஆட்சியில்..
திமுக ஆட்சியின் போது எஸ்.சி. பிரிவில் உள் ஒதுக்கீட்டை உருவாக்கி 3 சதவீத இடஒதுக்கீடு அருந்ததியருக்கு வழங்கப்பட்டது. இதனை 6 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக தமிழகத்தில் அருந்ததியர் சமூகத்தினரால் வைக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications