சென்னை சர்வதேச விமான நிலைய வளாகத்தில் ஒருவர் கொலை: குத்திய நபர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வாகன நிறுத்துமிடத்தில் டீ கடை வைப்பது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச விமான நிலைய வளாகத்தில் ரவி என்பவருக்கும்,கார்த்திகேயன் என்பவருக்கும் இடையே டீ விற்பது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. இது கைகலப்பாக முற்றியது. அப்போது கார்த்திகேயன் தன் கையில் வைத்திருந்த கத்தியால் ரவியை குத்தினார். இதில் ரவி படுகாயமடைந்தார்.

விமான நிலைய காவல்துறையினர் ரவியை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பலனளிக்காமல், ரவி உயிரிழந்தார். அதனை தொடர்ந்து, கார்த்திகேயனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்












Click it and Unblock the Notifications