தமிழக விவசாயிகளின் 20 நாள் போராட்டத்திற்கு பதில் என்ன? சென்னையில் இளைஞர்கள் உண்ணாவிரதம்
தமிழக விவசாயிகள் தொடர்ந்து 20 நாட்கள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் இளைஞர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை: டெல்லியில் தொடர்ந்து 20 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்டோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், வறட்சி நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் பெண்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் 20 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தொடர் போராட்டம்
இவர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள் பல்வேறு வகையான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தஞ்சையில் காவிரி மீட்புக் குழு சார்பில் தொடர்ந்து 6வது நாளாக இன்றும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இளைஞர்கள்
இந்நிலையில், சென்னையில் மாணவர்களும், இளைஞர்களும் போராட்டம் நடத்தினார்கள். இன்று காலை வள்ளுவர் கோட்டம் அருகில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 50க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்.

விவசாயிகள்
இவர்கள் அனைவரும் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக மெரினாவில் தொடர் போராட்டம் நடத்திய இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் ஒரு பிரிவினராவர். விவசாயிகள் பிரச்சனை குறித்த அனைத்து போராட்டங்களை தாங்கள் முன்னெடுப்போம் என்று போராட்டக்காரர்கள் கூறினர்.

கைது
முன்னதாக, அதே வள்ளுவர் கோட்டம் அருகில் இன்று காலை இளைஞர் மற்றும் மாணவர்கள் குழு ஒன்று, விவசாயிகளுக்கு ஆதரவாக திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் வலியுறுத்தினர். அவர்கள் மறுத்ததையடுத்து அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். இதில் திரைப்பட இயக்குநர் வ. கவுதமனும் கலந்து கொண்டு கைதானார்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications