யுவராஜின் வாட்ஸ் ஆப் ஆடியோ, வீடியோவை வெளியிட்ட "அட்மின்" அமுதரசு கைது
சேலம்: கோகுல்ராஜ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான யுவராஜ், வாட்ஸ் அப் மூலம் செய்திகளை வெளியிட உதவியதாக அவரது நண்பர் அமுதரசுவைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த தலித் இளைஞர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான, சங்ககிரியை சேர்ந்த தீரன் சின்னமலை பேரவை நிறுவனர் யுவராஜ் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நாமக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் சரணடைந்தார்.

யுவராஜ் தலைமறைவாக இருந்த காலத்தில் அடிக்கடி வாட்ஸ் அப் மூலம் தனது கருத்துக்களை அவர் வெளியிட்டு வந்தார். மேலும், சில தனியார் தொலைக்காட்சிகளுக்கும் அவர் பிரத்யேக பேட்டி அளித்தார்.
இதையடுத்து வாட்ஸ் அப் மூலமாக யுவராஜ் ஆடியோ வெளியிட யார் யார் உதவுகிறார்கள் என சிபிசிஐடி போலீசார் தீவிரமாகக் கண்காணித்தனர். இந்நிலையில், வைகுந்தம் கிராமத்தை சேர்ந்த பிரபு, சின்ன எலச்சிப்பாளையத்தைச் சேர்ந்த கிரி என்கிற கிரிதரன், பெலாப்பாளையம் சுரேஷ் என மூவரை போலீசார் கடந்த 8-ம் தேதி கைது செய்தனர்.
அதனைத் தொடர்ந்து 9ம் தேதி ஈரோடு மாவட்டம், பெருந்துறையைச் சேர்ந்த யுவராஜின் நண்பர் அமுதரசு (42), என்பவர் யுவராஜ் 11-ஆம் தேதி நாமக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் சரணடைய உள்ளதாக தகவல் தெரிவித்தார். இதையடுத்து, சிபிசிஐடி போலீசார் அவரையும் தீவிரமாகக் கண்காணித்தனர்.
அப்போது, அமுதரசு சங்ககிரியிலுள்ள யுவராஜின் வீடு, அவரது மாமியார் பாவாயி என்பவரின் வீடுகளில் தங்கிக்கொண்டு அங்கு வரும் செய்தியாளர்கள் மற்றும் யுவராஜின் ஆதரவாளர்களுக்கு யுவராஜூடன் தொடர்பு ஏற்படுத்தி கொடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், சிபிசிஐடி போலீசாரிடம் சரணடைந்த யுவராஜ், தலைமறைவாக இருந்தபோது தனக்கு வாட்ஸ் அப் மூலம் அமுதரசு பல்வேறு தகவல்களை அளித்தது குறித்து தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து அமுதரசை சிபிசிஐடி எஸ்.பி. நாகஜோதி, ஏடி.எஸ்.பி ஸ்டாலின், டி.எஸ்.பி.கள் வேலன், ராஜன், ஆய்வாளர்கள் பிருந்தா, பால்ராஜ், எஸ்.ஐ. சண்முகம் ஆகியோர் கொண்ட குழுவினர் கைது செய்தனர். நாமக்கல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.மலர்மதி முன் ஆஜர்படுத்தப்பட்ட அமுதரசுவை, 26-ஆம் தேதி வரை காவலில்வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, அமுதரசு சேலம் சிறையில் அடைக்கப்பட்டார்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications