Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தொடங்கிய மோடி.. ஆரம்பமே சர்ச்சை! தாம்பரம்-செங்கோட்டை ரயில் நிற்காதா? அதிராம்பட்டினம் மக்கள் கொதிப்பு

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி பல்லாவரத்தில் நடைபெற்ற ரயில் மற்றும் சாலை போக்குவரத்து திட்டங்களின் தொடக்க விழாவில் தாம்பரத்திலிருந்து புறப்படும் தாம்பரம் - செங்கோட்டை அதிவேக விரைவு ரயில் சேவையை தொடங்கி வைத்த நிலையில், ரயில் நிறுத்தங்களில் அதிராம்பட்டினம் இடம்பெறவில்லை என்று கூறி அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக இன்று சென்னை வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரத்தில் ரயில் மற்றும் சாலை போக்குவரத்து திட்டங்களின் தொடக்க விழாவில் கலந்துகொண்டார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ், மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிர் ஆதித்யா சிந்தியா, மாநில அமைச்சர்கள் எவ வேலு, அன்பரசன், திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Adirampattinam people request to stop Tambaram Sengottai train

இந்த விழாவில் தாம்பரத்திலிருந்து புறப்படும் தாம்பரம் - செங்கோட்டை அதிவேக விரைவு இரயில் சேவை மற்றும் திருத்துறைப்பூண்டியிலிருந்து புறப்படும் திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி DEMU இரயில் சேவை ஆகியவற்றை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். சென்னையை அடுத்த தாம்பரத்தில் இருந்து மாலை 6.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில், மறுநாள் காலை 7.25 மணிக்கு திருநெல்வேலிக்கும், செங்கோட்டைக்கு காலை 9.30 மணிக்கும் சென்றடையும்.

Adirampattinam people request to stop Tambaram Sengottai train

தாம்பரம் - செங்கோட்டை ரயில்: ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வாரம் ஒரு முறை இயக்கப்படும் இந்த ரயில் ஜூன் மாதம் ஒன்றாம் தேதி முதல் ஞாயிறு, செவ்வாய், வியாழக்கிழமைகளில் வாரம் மூன்று நாட்கள் இயக்கப்படும். இந்த ரயிலின் சாதாரண படுக்கைக்கான டிக்கெட் விலை தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு ரூ.405 ஆக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. மூன்றாம் வகுப்பு ஏசி டிக்கெட் விலை ரூ.985 ஆகவும், 2 ஆம் வகுப்பு ஏசி கோச்சிற்கான கட்டணம் ரூ. 1,505-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கு சாதராண படுக்கைக்கான டிக்கெட் கட்டணம் ரூ.435, 3 ஆம் வகுப்பு ஏசி கோச் கட்டணம் ரூ.1,060, 2 ஆம் வகுப்பு ஏசி கட்டணம் ரூ.1,620 என நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த ரயில் விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, அருப்புக்கோட்டை, விருதுநகர், நெல்லை, சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், பாவூர்சத்திரம், தென்காசி ஆகிய ரயில் நிலையங்கள் வழியாக செல்லும்.

Adirampattinam people request to stop Tambaram Sengottai train

அதிராம்பட்டினத்தில் நிற்காது: ஆனால், தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இந்த ரயில் நிற்காது என்று தெற்கு ரயில்வே வெளியிட்டு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தைவிட குறைவான கிரேட் கொண்ட ரயில் நிலையங்களில் இந்த ரயில் நிற்கும்போது, தங்கள் பகுதி புறக்கணிக்கப்பட்டதாக மக்கள் குற்றம்சாட்டினர்.

இதனை தொடர்ந்து அதிராம்பட்டினம் நகராட்சி தலைவர் தாஹிரா அம்மாள் கடந்த சில நாட்களுக்கு முன்பாக 45,000 மக்கள் வாழும் அதிராம்பட்டினத்தில் தினசரி ஆயிரத்துக்கும் அதிகமானோர் சென்னைக்கு செல்லும் நிலையில் இங்கு ரயில் நிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும் என தெற்கு ரயில்வே தலைமை மேலாளருக்கு கடிதம் எழுதி இருந்தார்.

Adirampattinam people request to stop Tambaram Sengottai train

ரயில் மறியல் போராட்டம்: இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் பிரதமர் மோடி ரயில் சேவையை தொடங்கி வைத்து உள்ளார். இதற்கிடையே அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் இந்த ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அதிராம்பட்டினம் நல்வாழ்வு பேரவை அமைப்பு அறிவித்து இருந்தது. இதற்கிடையே இன்று அதிராம்பட்டினம் வந்த தஞ்சாவூர் எம்பியும் முன்னாள் மத்திய இணை அமைச்சருமான எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்தை சந்தித்த சமூக ஆர்வலர்கள் அதிராம்பட்டினத்தில் தாம்பரம் - செங்கோட்டை ரயில் நின்று செல்ல ஆவண செய்யுமாறு கேட்டுக்கொண்டனர்.

அதேபோல், நாகை இந்திய கம்யூனிஸ்டு எம்பி செல்வராஜ் மற்றும் ரயில்வே அதிகாரிகளின் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கை தொடர்பான விரைந்து நடவடிக்கை எடுப்பதாக தெற்கு ரயில்வே தரப்பில் உறுதியளிக்கப்பட்டதால் ரயில் மறியல் போராட்டத்தை ஒத்திவைப்பதாக அறிவித்த அதிராம்பட்டினம் நல்வாழ்வு பேரவையினர், இதை நிறைவேற்றாவிட்டால் மாபெரும் மக்கள் போராட்டம் நடைபெறும் என்று எச்சரித்துள்ளனர்.

Adirampattinam people request to stop Tambaram Sengottai train
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+