தஞ்சை மருத்துவக்கல்லூரியில் பயிற்சி டாக்டர் மீது சரமாரி தாக்குதல்.. வெளியான சிசிடிவி காட்சி
தஞ்சை: தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி டாக்டர் மீது தாக்குதல் நடத்தப் பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிசிடிவி காட்சி மூலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Recommended Video
தஞ்சை மேல வண்டிக்காரத் தெருவைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் விபத்தில் காயமடைந்தார். காயமடைந்தவரை சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு நேற்றிரவு அவரது உறவினர்கள் கொண்டு சென்றனர்.
அங்கு வரவேற்பு அறையில் பணியாற்றிய பயிற்சி டாக்டரிடம் சிகிச்சை அளிக்க கூறினர். அப்போது டாக்டருக்கும் காயம் அடைந்த வாலிபரின் உறவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது.
வாக்குவாதம் முற்றியதில் அங்கு இருந்தவர்கள் பயிற்சி டாக்டரை நாற்காலியை கொண்டு தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் அங்கு உள்ள பொருட்களை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இது அங்கிருந்த டாக்டர்களுக்கு தகவல்கள் பரவவே போராட்டமாக மாறியது. நள்ளிரவில் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதுகுறித்து வருவாய் கோட்டாட்சியர் தாசில்தார்கள் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். மருத்துவர்களின் கோரிக்கையை ஏற்று தாக்குதல் நடத்தியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதன் பிறகு போராட்டம் கைவிடப்பட்டு மருத்துவர்கள் பணிக்கு திரும்பினர். இதனிடையே மருத்துவரை காயம் அடைந்தவர்களின் உறவினர்கள் தாக்கக்கூடிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து மருத்துவ கல்லூரி மருத்துவமனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.