கம்பீரமாக காட்சியளித்த "என் பிள்ளைகளுக்கு" இந்த நிலையா?.. அதிர்ச்சியில் விவசாயி தற்கொலை
Recommended Video

தஞ்சை: தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் கஜா புயலால் தென்னை மரங்கள் முறிந்து சேதமடைந்ததால் மனமுடைந்த விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
வங்கக் கடலில் உருவான கஜா புயல் கடந்த வாரம் கரையை கடந்த போது டெல்டா மாவட்டங்களை ஒரு சுழற்று சுழற்றிவிட்டது. இந்நிலையில் அங்கு பயிரிடப்பட்டிருந்த தென்னை, வாழை, நெல், வெற்றிலை உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்தன.
ஏக்கர் கணக்கில் போட்ட பயிர்களும் சேதமாகி வீடுகளும் சேதமாகிய நிலையில் விவசாயிகளும் மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். சோழகன்குடிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சுந்தரராஜ். இவரது தென்னை மரங்கள் முறிந்து விழுந்ததை கண்டு பெரும் சோகத்தில் இருந்தார்.

பெரும் அதிர்ச்சி
இதை ஜீரணிக்க முடியாமல் சுந்தரராஜ் இன்று தற்கொலை செய்து கொண்டார். வறட்சியால் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்போது கஜா புயலின் கோரதாண்டவத்தால் விவசாயி தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மோடி பார்வையிடவில்லை
இதுகுறித்து விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர். பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை மோடி பார்வையிடவில்லை.

கண்டனம்
விவசாயி சுந்தரராஜ் தற்கொலைக்கு தமிழக அரசு பதில் சொல்ல வேண்டும் என்றார். அது போல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசனும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தற்கொலை கூடாது
அவர் கூறுகையில் விவசாயிகளுக்கு நம்பிக்கையூட்டும் நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும். தென்னை மரம் ஒன்றுக்கு ரூ 1100 நிவாரணம் அறிவித்திருப்பது போதாது. விவசாயிகள் யாரும் தற்கொலை செய்து கொள்ள கூடாது என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக! -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ












Click it and Unblock the Notifications