தாறுமாறு தஞ்சாவூரு.. விரைவில் விமான சேவை! சென்னை, பெங்களூருக்கு அடுத்த மாதம் சல்லுன்னு பறக்கலாம்
தஞ்சாவூர்: தஞ்சாவூர் விமானப்படைத் தளத்தில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு பயணிகள் விமான சேவை அடுத்த மாதம் தொடங்கப்படுகிறது.
டெல்டா மாவட்டங்களிலே முதன்மை நகரமாக தஞ்சாவூர் திகழ்ந்து வருகிறது. திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பணி, படிப்பு என பல்வேறு காரணங்களுக்காக தஞ்சைக்கு வந்து செல்கிறார்கள். அதேபோல் திருச்சி விமான நிலையத்துக்கு தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை சேர்ந்த பயணிகளே அதிகளவில் சென்று வருகிறார்கள். இந்த நிலையில் தஞ்சாவூரில் இருந்து உள்நாட்டு விமானங்களை இயக்க வேண்டும் என்பது பல ஆண்டுகால கோரிக்கையாக இருந்து வருகிறது.

தஞ்சாவூர் பேருந்து நிலையத்தில் இருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில் இந்த விமானப்படைத் தளம் அமைந்து உள்ளது. கடந்த 1990 ஆம் ஆண்டு இங்கிருந்து சென்னைக்கு வாயுதூத் விமான சேவை இயக்கப்பட்டு வந்தது. ஆனால், பயணிகள் எண்ணிக்கை அதிகம் இல்லாததால் விமான சேவை நிறுத்தப்பட்டது. 2006 ஆம் ஆண்டு இதை விமானப் படை கையகப்படுத்தி 2012 முதல் முதன்மை விமானப்படை நிலையமாக உள்ளது. இந்த நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
அருகில் உள்ள திருச்சியில் பன்னாட்டு விமான நிலையம் இருந்தாலும், டெல்டா மாவட்ட மக்களின் வசதிக்காக தஞ்சாவூரில் இருந்து பயணிகள் விமான சேவையை தொடங்க வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்து வந்தன. இந்த நிலையில்தான் சிறிய நகரங்களை விமான சேவை மூலம் இணைக்கும் உதான் திட்டத்தின் கீழ், தஞ்சாவூர் விமான நிலையத்தில் இருந்து பயணிகள் விமான சேவையை தொடங்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான கட்டமைப்பு பணிகள் நடந்து முடிந்து உள்ளன.
இதனை தொடர்ந்து வரும் டிசம்பர் மாதம் தஞ்சாவூர் விமான நிலையத்தில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு ஆகிய பெரு நகரங்களுக்கு பயணிகள் விமான சேவை தொடங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. முதல் கட்டமாக 20 இருக்கைகளை கொண்ட சிறிய விமானங்கள் தஞ்சையில் இருந்து இயக்கப்பட இருக்கின்றன. இது தொடர்பாக ஏர்டாக்சி நிறுவனம் எந்தெந்த நகரங்களில் விமான சேவை தொடங்கப்படும் என்ற விபரத்தை வெளியிட்டு உள்ளது.
அதில் தஞ்சாவூரில் இருந்து பெங்களூர், தஞ்சாவூரில் இருந்து சென்னை, பெங்களூரில் இருந்து தஞ்சாவூர், சென்னையில் இருந்து தஞ்சாவூர் ஆகிய நகரங்களுக்கு விமான சேவை இயக்கப்படும் என்று தெரிவித்து உள்ளது. அதேபோன்று ராமநாதபுரம், வேலூர், நெய்வேலி ஆகிய நகரங்களுக்கும் விமான சேவை தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
-
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications