மழை, வெயில் தெரியாது.. உயிரை பணயம் வைத்து பணியாற்றும் மின் ஊழியர்கள்.. டெல்டா ஹீரோஸ்!
கஜா புயல் காரணமாக தமிழகம் முழுக்க மின் கம்பங்கள் அதிக அளவில் விழுந்துள்ளது.
தஞ்சாவூர்: கஜா புயல் காரணமாக தமிழகம் முழுக்க மின் கம்பங்கள் அதிக அளவில் விழுந்துள்ளது. இதை சரி செய்ய மின்சார ஊழியர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து பணியாற்றி வருகிறார்கள்.
கஜா புயலால் தமிழகம் மொத்தமாக நிலைகுலைந்து போய் உள்ளது. 10 மாவட்டத்தில் மக்கள் மொத்தமாக வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
புயலால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட டெல்டா பகுதிகளில் இயல்பு நிலை திரும்ப இன்னும் பல மாதங்கள் ஆகும் என்று கூறப்பட்டுள்ளது. இங்கு மின்சார கம்பங்கள்தான் அதிக அளவில் விழுந்து இருக்கிறது,.
[அப்பாடா.. 9 நாள் கழித்து வெளிச்சத்தை பார்த்து துள்ளி குதித்த மக்கள் ]

மின்கம்பங்கள்
இந்த புயலில் நிறைய மின் கம்பங்கள் விழுந்துள்ளது. இதனால்தான் பல பகுதிகளுக்கு மின்சார வசதி கொடுக்க முடியாமல் மின்சார வாரியம் திணறி வருகிறது. வயல்கள், காடுகளின் வழியாக செல்லும் மின் கம்பங்கள் எல்லாம் மொத்தமாக விழுந்து இருக்கிறது.

எத்தனை விழுந்தது
சுமார் 1.80 லட்சம் மின் கம்பங்கள் இதனால் விழுந்துள்ளதாக மின்சார வாரியம் தெரிவிக்கிறது. இந்த மின்கம்பங்களை மீண்டும் மாற்றவே 200 கோடி ரூபாய் வரை ஆகும் என்றும் மின்சார வாரியம் தெரிவித்து இருக்கிறது. இது மட்டுமில்லாமல் பல இடங்களில் மின்சார வயர்கள் அறுந்து விழுந்து இருக்கிறது.

எப்படி வேலை செய்கிறார்கள்
இந்த பெரும் சேதங்களை மின்சார ஊழியர்கள் மிக சிறப்பாக கையாண்டு சரி செய்து வருகிறார்கள். மழையில் கூட இவர்கள் களத்தில் இறங்கி பணியாற்றி வருகிறார்கள். பல மின்சார ஊழியர்கள் உயிரை பணயம் வைத்து மின் இணைப்புகளை சரி செய்கிறார்கள்.

முன்னாள் ஊழியர்கள்
இந்த பணிகளை இந்நாள் ஊழியர்கள் மட்டும் செய்யவில்லை என்பதுதான் குறிப்பிடத்தக்கது. இந்த பணிகளை செய்ய சிலர் முன்னாள் மின்சார ஊழியர்களும் காசு, பணம் எதிர்பார்க்காமல் களமிறங்கி இருக்கிறார்கள். அதேபோல் வெளிமாவட்ட ஊழியர்கள் பலர் இதற்காக களமிறங்கி உள்ளனர்.
-
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக?












Click it and Unblock the Notifications