தென்காசியில் பரபரப்பு.. ஷாலிக் வீட்டை ரவுண்டு கட்டிய அதிகாரிகள்.. தீவிரமாகும் ராமலிங்கம் கொலை வழக்கு
ராமலிங்கம் கொலையின் முக்கிய குற்றவாளி வீட்டில் என்ஐஏ சோதனை செய்து வருகிறது
கும்பகோணம்: திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அகமது ஷாலிக் என்பவர் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டதால் தென்காசியில் பெரிய பரபரப்பு ஏற்பட்டது.
மதமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த திருபுவனத்தை சேர்ந்த பாமக பிரமுகர் ராமலிங்கம் என்பவர் பிப்ரவரி 5ம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த படுகொலை தமிழகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதனை கண்டித்து பாஜக, இந்துமக்கள் கட்சி, ஆர்எஸ்எஸ் மற்றும் இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தின.

தேசிய புலனாய்வு அமைப்பு
ஆனால் இந்த கொலை வழக்கை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தவண்ணம் இருந்தது. அதனால் இந்த வழக்கின் விசாரணை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, கொச்சியில் இருந்து தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணையை துரிதமாக ஆரம்பித்தனர்.

எர்ணாகுளம்
இந்த கொலை வழக்கில் தொடர்புடைய மணப்பாறை பகுதியை சேர்ந்த முகமது பாரூக் என்பவரை கைது செய்த அதிகாரிகள், அவரது வீட்டையும் சோதனை நடத்தினர். அதேபோல, திருவிடைமருதூர் அடுத்த விநாயகன் தோப்பைச் சேர்ந்த மைதீன் அகமது சாலி என்ற 51 வயது நபரை கடந்த வாரம் எர்ணாகுளத்தில் அதிகாரிகள் கைது செய்தனர்.

சதி திட்டம்
கைது செய்யப்பட்ட சாலிக்கும், ராமலிங்கத்தைக் கொன்ற கும்பலுக்கும் இடையே பெரும் நெருக்கம் இருப்பதாக என்ஐஏ சந்தேகித்தது. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ ஆகியவை நடத்திய பல்வேறு சதி ஆலோசனைக் கூட்டங்களில் சாலியும் கலந்து கொண்டதாகவும், அந்தக் கூட்டங்களில்தான் ராமலிங்கத்தைக் கொல்வது என்ற முடிவு எடுக்கப்பட்டதாகவும் என்ஐஏ உறுதியாக தெரிவித்திருந்தது.

தென்காசி வீடு
இந்நிலையில், அகமது ஷாலிக்கின் சொந்த ஊர் தென்காசி ஆகும். அதனால் தென்காசி வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று காலை முதல் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதன்காரணமாக, சுமார் 70க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியிலும் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த சோதனையில் பாஸ்போர்ட், ஆதார் கார்டு உள்ளிட்ட முக்கிய ஆதாரங்கள் சிக்கியதாகவும் சொல்லப்படுகிறது.

மனைவி பேட்டி
இந்தசோதனை குறித்து ஷாலி மனைவி ஆஷியாபானு சொல்லும்போது, "என்னை மிரட்டி எனது வழக்கறிஞருக்கு கூட தகவல் சொல்ல விடாமல் வீடு முழுவதும் சோதனை மேற்கொண்டனர். வீட்டில் இருந்து நிறைய ஆவணங்களை எடுத்துள்ளதாக சொல்கிறார்கள். அது போலியானவை. அவர்களே கொண்டு வந்து வைத்துவிட்டு சோதனை என்ற பெயரில் எடுத்து செல்கிறார்கள்" என்றார்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா? -
ஆண்டவரையே திகைக்க வைத்த அறிவாலயம்.. கமல்ஹாசன் எடுத்த கடைசி அஸ்திரம்! மநீம கூட்டத்தில் முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications