ஒரத்தநாடு பகுதியில் 20 கிராமங்கள் கடும் பாதிப்பு.. 4 அமைச்சர்களை முற்றுகையிட்டு மக்கள் கொந்தளிப்பு
Recommended Video

தஞ்சை: தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் உணவு, குடிநீர் மற்றும் மின்சாரம் ஆகியவை வழங்கப்படவில்லை என கூறி ஆய்வு செய்ய வந்த 4 அமைச்சர்களை மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கஜா புயல் கரையை கடந்த போது ருத்ரதாண்டவம் ஆடியது. இதனால் சுழன்று சுழன்று அடித்த காற்று, விடாமல் பெய்த பேய் மழை ஆகியவற்றால் டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

அப்பகுதிகளில் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் உண்ண உணவு, குடிக்க குடிநீர், மின்சாரம் இல்லாமல் ஏராளமான கிராமங்கள் அல்லல்படுகின்றன. இதனால் மக்கள் ஆங்காங்கே சாலை மறியல், போராட்டங்களில் ஈடுபடுகின்றனர்.
இந்நிலையில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே தெலுங்கன்குடி கிராமத்தில் தண்ணீர் இல்லை, மின்சாரம் இல்லை, உணவு இல்லை மக்கள் வேதனையில் உள்ளனர். ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த 20 கிராமங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் ஆய்வு பணிக்காக அங்கு அமைச்சர்கள் செங்கோட்டையன், துரைக்கண்ணு, கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோரும், எம்பி வைத்திலிங்கமும் வந்தனர்.
உடனே ஆத்திரமடைந்த மக்கள் அமைச்சர்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அத்துடன் எம்பி வைத்திலிங்கத்தின் காரையும் முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் அமைச்சர்களுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கி அவர்களை அழைத்து சென்றனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications