எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் - தஞ்சாவூர் திமுக வேட்பாளர்: ஒரே தொகுதியில் 9வது முறையாக களமிறங்கும் வேட்பாளர்
தஞ்சாவூர் தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம்.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் தொகுதியில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம்.
புதுக்கோட்டை, நாட்டாணியைச் சேர்ந்தவர் பழனிமாணிக்கம் (69). எம்.ஏ., எம்.எல்., படித்தவரான இவரது தொழிலே முழுநேர அரசியல் தான். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

ஒன்பதாவது முறையாக தஞ்சை தொகுதியில் இவர் போட்டியிடுகிறார். இதில், 1996, 98, 99, 2004 மற்றும் 2009ம் ஆண்டு தேர்தல்களில் இவர் வெற்றி பெற்றார். 1984, 89, 1991 தேர்தலில் தோல்வியைத் தழுவினார்.
மத்திய நிதித்துறை இணை அமைச்சராக பதவி வகித்தவர் பழனிமாணிக்கம். மாவட்டச் செயலாளராக இருந்ததால் தொகுதி முழுவதும் நன்கு அறியப்பட்டவர்.
கடந்த 2014-ல் நடைபெற்ற தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை இழந்த இவர், இம்முறை மீண்டும் வாய்ப்பை பெற்றுள்ளார். தேர்தல் பணிகளை முன்னெடுத்துச் செல்ல பொருளாதார தடையேதும் இல்லாத இவர், வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன் சென்னையில் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து வாழ்த்து பெற்று, ஆதரவு சேர்த்து வருகிறார்.
கடந்த 2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் அதிமுக இத்தொகுதியில் வெற்றி பெற்றது. இதனால் கைவிட்டுப் போன தொகுதியை மீண்டும் திமுகவின் வெற்றிக் கோட்டையாக்குவாரா பழனிமாணிக்கம் என்ற எதிர்பார்ப்பு கட்சியினரிடையே உள்ளது.












Click it and Unblock the Notifications