புற்றுருவம்! 8 திசைக்கு காவல் தெய்வம்! தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்
தஞ்சை: தஞ்சை மாவட்டம் புன்னைநல்லூர் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் இன்று குடமுழுக்கு நடைபெறுகிறது. இதையொட்டி இன்று அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சையிலிருந்து 5 கி.மீ. தூரத்தில் உள்ளது புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில். தஞ்சை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்களின் காவல் தெய்வமாக விளங்குகிறது. இந்த கோயிலில் சுமார் 21 ஆண்டுகளுக்கு பிறகு இன்று கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கடந்த 3ஆம் தேதி விக்னேஸ்வர பூஜைகளும் 4ஆம் தேதி நவக்கிரக ஹோமம், இதைத் தொடர்ந்து 5ஆம் தேதி மகாலட்சுமி ஹோமம் உள்ளிட்டவை நடந்தன. அது போல் 7 ஆம் தேதி காலை விக்னேஸ்வர பூஜை, கஜ பூஜை நடத்தப்பட்டு மாலை திருக்குடங்கள் யாகசாலை எழுந்தருளுதல் செய்யப்பட்டு முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கின.
தொடர்ந்து கடந்த சனிக்கிழமை 2ஆம் கால யாகசாலை பூஜைகள் நடந்தன. பின்னர் மாலை 3ஆம் கால யாகசாலை பூஜைகள், நடைபெற்றன. இந்த நிலையில் நேற்று காலை 4ஆம் கால யாகசாலை பூஜையும் மாலை 5ஆம் கால யாகசாலை பூஜையும் நடைபெற்றது.
இன்று காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்படும். இரவு மாரியம்மன் வீதியுலா நடைபெறுகிறது.
இந்த கும்பாபிஷேகத்தையொட்டி இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் நேற்று வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தஞ்சாவூர் மாவட்டம் மற்றும் வட்டம், இராமாபுரம் சரகம், புன்னைநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் எட்டு திசைகளிலும் காவல்புரியும் அஷ்டசக்திகளுள் கீழ்திசையின்கண் புற்றுருவமாய் நின்று அருள்புரியும் சக்தி ஸ்தலம் என்றும், இத்திருக்கோவிலுக்கு திருக்குடமுழுக்கு விழா எதிர்வரும் 10.02.2025 (திங்கட் கிழமை) அன்று நடைபெற உள்ளதால், மேற்படி திருக்குடமுழுக்கு விழாவை காண பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள், பக்தர்கள், சுற்றுலா பயணிகள், முக்கிய பிரமுகர்கள், உயர் அலுவலர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் வருகைபுரிவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாலும், தஞ்சாவூர் மாவட்டம் மற்றும் வட்டம், புன்னைநல்லூர் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் குடமுழுக்கு நடைபெறும் நாளான 10.02.2025 (திங்கட் கிழமை) அன்று தஞ்சாவூர் வட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு, 22.02.2025 (சனிக்கிழமை) அன்று பணிநாளாக கருதப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications